விசித்ரவீர்யனின் முடிவும் - வியாசரின் பிறப்பும்
முந்தய அதிகாரங்களில் விசித்திர வீரியனுக்கும், காசியின் அரச குமாரிகளான அம்பிகா மற்றும் அம்பாலிகாவிற்கும் இடையே நடந்த திருமணத்தைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா?
உண்மையில் அந்தத் திருமணம் நடந்த கையோடு, விசித்திர வீரியன் கல்யாண மண்டபத்திலேயே தனது உடல் உபாதையின் காரணமாக மயங்கி விழுந்தான். உடனே அவனை சேவகர்கள் மருத்துவக் கூடத்திற்கு வழக்கம் போல எடுத்துச் சென்றனர். அங்கு அவன் சில காலத்திலேயே எலும்புருக்கி நோயினால் மாண்டு போனான்.
திருமணம் முடிந்து, எந்த வித இன்பத்தையும் அனுபவிக்காத அம்பிகாவின் வாழ்வும் அம்பாலிகாவின் வாழ்வும் வசித்திர வீரியனின் மரணத்தால் இருண்டு போனது. அதனால், அவர்கள் இருவரும் கதறி அழுதார்கள்.
சத்தியவதியின் நிலையோ இன்னும் பரிதாபமாக இருந்தது," அய்யோ! அன்று பீஷ்மனுக்கு எனது தந்தையால் செய்யப் பட்ட அநீதியின் விலைவா இது? எனது இரு மகன்களுமே அற்ப ஆயுளில் எதையுமே அனுபவிக்காமல் போய் விட்டார்களே! இனி எனது குலம் தழைக்க வழி ஏது?" என்று புலம்பித் தவித்தாள் அவள்.
உடனே சத்தியவதி சிந்தித்தாள், தனது தந்தை செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட சித்தம் கொண்டாள். அக்கணமே, பீஷ்மரை அழைத்தாள்.
பீஷ்மனும் ராஜா மாத சத்தியவதியின் முன்பாக வந்து வணங்கி நின்றான். அப்போது பீஷ்மனிடம் சத்தியவதி, "மகனே! நீ அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும். திருமணம் செய்து குழந்தையைப் பெற வேண்டும். புகழ் பெற்ற நமது அரச பரம்பரை அழியக் கூடாது. நீ செய்த சபதத்தை பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டு இருக்காதே. உனது தாயே உன்னிடம் வலிய வந்து வேண்டுவதால் நீ சபதத்தை மீறலாம். அது தவறு ஆகாது" என்றாள்.
ஆனால் பீஷ்மரோ தாயின் அந்த வார்த்தைகளைக் கேட்டு திடுக்கிட்டு, சத்தியவதியிடம், "தாயே ! நான் சபதம் செய்தது, செய்தது தான்! அதனை ஒரு பொழுதும் நான் மீற மாட்டேன். வேறு ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்" என்றார்.
அப்போது சத்தியவதி ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினாள். அக்கணம் முன்பு தனது இளமைக் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் அவளது நினைவிற்கு வந்தது. அதனை பீஷ்மனிடம் சொல்லத் தொடங்கினாள், "மகனே பீஷ்மா! முன்பு ஒரு காலத்தில் உனது தந்தையை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அது யாதெனில், நான் யமுனையின் நதிக் கரையில் பரிசலை எப்பொழுதும் போல செலுத்தி வந்தேன். அப்பொழுது ஒரு நாள் முனிவர்களில் சிறந்த பராசரர் எனது ஓடத்தில் ஏறினார். அவர் அவ்வாறு ஓடத்தில் ஏறிய சில கணங்களில், எனது அழகைக் கண்டு அவர் மயங்கினார். அதனால் தனது திவ்விய திருஷ்டியால் என்னை வெகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவரது பார்வையில் நான் என்னையே மறந்தேன். அப்போது அக்கணமே ஓடத்தில் தேஜஸ் மிகுந்த ஒரு மகன் எனக்குத் தோன்றினான். அவன் தான் வியாச முனிவன்!"
![]() |
| பராசரரும் சத்தியவதியும் |
அத்துடன் நான் இப்போதே வனத்துக்கு சென்று, தவங்கள் செய்ய சித்தம் கொண்டு உள்ளேன். நீங்கள் எப்போது என்னை அழைத்தாலும் நான் உங்கள் முன்னால் தோன்றுவேன்" என்று கூறி விடை பெற்றுச் சென்றான்.
- தொடரும்

No comments:
Post a Comment