Friday, April 19, 2013

பொன்னியின் செல்வன் - ஆண்டிராய்டு புத்தகமாக.

வணக்கம் நண்பர்களே.

சமீப காலமாக இடுகைகள் இடுவதை சற்று குறைத்து, நான் பல ஆண்டுகளாக படிக்க நினைத்த "பொன்னியின் செல்வன்" நாவலை படித்து முடித்தேன். சரித்திர காலத்திற்கே சென்று விட்ட உணர்வு ஏற்பட்டது.

கற்பனையில் வந்திய தேவனும், அருண்மொழி வர்மனும் என்னுடன் பேசினார்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மனதில் நிற்பது போல வடிவமைத்து உள்ளார் அமரர் கல்கி.

அதன் தாக்கத்தினால் அதனை ஒரு மின் புத்தகமாக (E-Book) செய்ய விரும்பினேன். மின் புத்தகத்தை விட எளிதானதாக இருப்பது ஆண்டிராய்டு ஆப்ஸ் ஆகும். இது ஒரு open source என்பதால் என் சிறு கனவை நனவாக்கிவிட்டேன். நீங்கள் இதை தரவிறக்கம் (Download) செய்து உங்கள் ஆண்டிராய்டு சாதனத்தில் நிறுவி படித்து மகிழலாம்.

இது ஒரு Virtual புத்தகம் போன்ற வடிவமைப்பு கொண்டது. அட்டை படம் தஞ்சை பெருவுடையார் கோவில் (தஞ்சை பெரிய கோவில்) ஓவியம் ஆகும். நாம் படித்த இடத்தை book mark செய்து கொள்ளும் வசதியும் உண்டு.

பயன்படுத்திப் பார்த்து தங்கள் மேலான கருத்துகளையும், விமர்சனங்களையும் கூறவும்.

App ஐ தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

To download the app click here

Appன் screen shot படங்கள் :












பின்-குறிப்பு :
appmk book maker என்கிற மென்பொருளை பயன்படுத்தி இதை செய்துள்ளேன்.