மிக சாதாரண நிலையில் இருந்து தன்னுடைய சொந்த முயற்சியின் மூலம் இந்த உலகை வென்றவர்கள் தான் சரித்திரத்தில் பெயர் பெறுகின்றனர். அப்படிப் பட்ட உன்னத நிலையை எய்தியவர்கள் மிகவும் சிலரே, அந்த சிலரில் குறிப்பிடத் தகுந்தவர் மன்னர் சத்ரபதி சிவாஜி ஆவார்.
சத்ரபதி சிவாஜி மகராஜ் |
இரும்பைவிட வலிமையான மன உறுதி, கூர்மையான அறிவுத் திறன், தன்னை போன்றே சிந்திக்கவும், செயலாற்றவும் கூடிய வலிமையான படையை உருவாக்கிய சிந்தனை இவையெல்லாம் தான் சத்ரபதி சிவாஜியை மாபெரும் வெற்றி வீரனாக மாற்றியது.
- முதன் முதலில் கெரில்லா போர்முறையை அறிமுகப்படுத்தியவர்.
- 16 வது வயதிலேயே தன்னுடைய முதல் கோட்டையைப் பிடித்தவர்.
- தான் சந்தித்த எந்த போரிலும் தோற்காதவர்.
- அவுரங்கசீப்பினால் கடைசி வரை தோற்கடிக்கப்படாதவர்.
- மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்தை தன்னுடைய மிகச் சிறிய படையை வைத்து சிதறடித்தவர்.
- உளவுத் துறையை மிகத் திறமையாகப் பயன்படுத்திவர்.
- வலிமையான கப்பல் படையை உருவாக்கக் காரணமாக இருந்தவர்.
- ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவர், இருந்தும் அனைத்து மதங்களையும் சரி சமமாக மதித்தவர்.
- பெண்களைப் பெரிதும் மதித்தவர்.
- வாழ்வில் மிக மோசமானத் தருணங்களிலும் துவண்டு போகாமல் அசாதாரணமான துணிச்சலையும், போராட்ட குணத்தையும் காட்டியவர்.
அமெரிக்க - வியட்னாம் போர் முடிந்த பின்பு பாரதம் வந்த அப்பொதைய வியட்னாம் தலைவர், முதலில் பார்க்க விரும்பியது சத்ரபதி சிவாஜியின் சமாதியை தான். அங்கு வந்த அவர் சிவாஜிக்கு மரியாதை செலுத்தி விட்டு அதற்கான காரணத்தை அவர் சொன்னார்.
வல்லரசான அமெரிக்காவை எதிர்க்கும் துணிச்சலை அவர்கள் (வியட்நாமியர்கள்) பெற்றது சிவாஜியின் மூலம் தான். அவருடைய கெரில்லா போர்முறை, அவர் பயன்படுத்திய சாதுரியமான உத்திகள், சாகசங்கள் அவர்களுக்கு தெம்பும், உற்சாகமும் தந்து அமெரிக்காவை வீழ்த்த பேருதவி செய்தது. அதை நினைவு கூர்ந்தே அவர் பாரதம் வந்ததும் சத்ரபதி சிவாஜிக்கு மரியாதை செலுத்தினார்.
இன்று சத்ரபதி சிவாஜியின் 387வது பிறந்த நாள்.