நேதாஜி:
நேதாஜி இந்த வார்த்தைக்கு அர்த்தம் “தலைவர்” என்பது ஆகும். சிலருக்கு மட்டுமே அவர்களுக்கு தரும் பட்டப்பெயர் பொருந்தும். (நம் ஊரிலும் சிலர் இருக்கிறார்கள் எளைய தளபதி, சுமால் தளபதி, பிர்ச்சி தளபதி என்று அவர்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாமல்). ஆனால் சுபாஷ் சந்திர போஸுக்கு நேதாஜி என்ற பெயரே நிலைத்துவிட்டது. அவர் அதற்கு உதாரணமாகவும் திகழ்ந்தார்.
கொல்கத்தாவின் வீதிகளில் ஒரு சுதந்திரத் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் கூறிய சில வாசகங்கள் அங்கே இருந்த ஒரு சிறுவனின் மனதில் பதிந்தது. அவன் அதை மனதில் பாடம் செய்து கொண்டே தன்னுடைய நோட்டில் எழுதுவதற்கு அவனுடைய வீட்டிற்குள் ஓடினான்.
வீட்டிற்குள் அமர்ந்திருந்த தன்னுடைய தம்பியைத் தாண்டி ஓடினான். அதை கண்ட அவனுடைய தம்பிக்கு வெகுவாக கோபம் வந்தது. அவனை தாண்டி குதித்து சென்றதால் வந்த கோபம் அதையும் மீறி அப்படி என்ன அவசரமாக செய்யப் போகிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் சென்று பார்த்தான்.
ஓடிவந்த அண்ணன் தன்னுடைய நோட்டில் கீழ்கண்ட வாசகங்களை எழுதினான் -
“நான் பணக்காரனாவேன், நான் மாமனிதனாவேன், நான் புகழ்பெற்றவனாவேன் எனக்காக அல்ல, என் தாய்நாட்டிற்காக”
“I will become
rich , I will become great, I will become popular – not for myself,
but for my country.”
இந்த வாசகங்களை எழுதி விட்டு அண்ணன் வெளியே போய்விட்டான், ஆனால் அதைப் படித்த தம்பி தன்னுடைய இதயத்தில் எழுதிக் கொண்டான். அதையே தன்னுடைய வாழ்வின் குறிக்கோளாக எடுத்துக் கொண்டான். அந்த சிறுவன் தான் சுபாஷ் சந்திர போஸ். அந்த
சுதந்திரத் தலைவர் யோகி ஸ்ரீ அரவிந்தர் ஆவார்.
1897 ஜனவரி 23 அன்று கட்டாக்கில் ஜானகி நாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவி தம்பதியருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அறிவாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். 16 வயதிலேயே துறவற நிலை அடைய வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் சரியான குரு கிடைக்காததால் இரண்டு மாதங்கள் கழித்து வீடு திரும்பினார். தன்னுடைய குருவாக சுவாமி விவேகானந்தரை இவர் ஏற்றார்.
தன்னுடைய தந்தையின் வேண்டுகோளின் பேரில் கொல்கத்தா பிரஸிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். அங்கே அவருடைய சுதந்திர போராட்ட உணர்ச்சிக்கு தூண்டுதலாக இருந்த அந்த சம்பவம் நடைபெற்றது. அந்த கல்லூரியில் ஓட்டன் என்ற சரித்திரப் பேராசிரியர் இந்தியர்களை தரக்குறைவாக பேசியும், நடத்தியும் வந்தார். இதனால் கோபமுற்ற அவர் தன்னுடைய நண்பர்களை கூட்டிக் கொண்டு அவரை தாக்கினார். இதனால் கல்லூரியிலிருந்து சுபாஷும் அவர் நண்பர்களும் நீக்கப்பட்டார்கள் மேலும் இரண்டு வருடம் எந்தக் கல்லூரியிலும் சேர முடியாமல் படிப்பைத் தொடர முடியாத நிலைக்கு ஆளானார்கள்.
இதனால் தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ்மற்றும் சிலரின் உதவியுடன்
1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு
1919 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன் மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.
1919ல் ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்தது. ஜெனரல் டையர் என்ற கொலைகாரன் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொலை செய்தான். இது அவரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் சுதந்திரப் போரில் கலந்து கொள்ள முக்கியமான ஒரு காரணம் என்றும் கூறலாம்.
நாட்டு சூழ்நிலைப்பற்றி அடிக்கடி விவாதங்களில் ஈடுபட்ட சுபாஷை அவரது தந்தையார் அரசியலில் ஈடுபடுத்த விரும்பாமல் (ஐ.சி.எஸ்) இந்தியன் சிவில் சர்வீஸ் (இன்றைய ஐ.ஏ.எஸ்
(IAS)க்கு ஈடானது) எழுத லண்டனுக்கு அனுப்பிவைத்தார். அதில் இந்தியாவிலேயே நான்காவதாக தேறினார் சுபாஷ், ஆனால் பாரதத்தை அடிமையாக்கி வைத்திருந்த ஆங்கிலேயரிடம் வேலை செய்யக் கூடாது என்ற முடிவினால் அந்த பட்டத்தை அங்கேயே தூக்கி எறிந்து விட்டு வந்தார்.
இதை பாராட்டிய சித்தரஞ்சன் தாஸ் அவரை சுதந்திர போரில் பங்கு பெற அழைத்தார். இதே சமயத்தில் தான் காந்தியும் பாரத அரசியலில் ஈடுபட்டார். தாஸ் தான் நிறுவிய “தேசியக் கல்லூரியில்” 25தே வயதான போஸை தலைவராக நியமித்தார், அவர் மாணவர்களுக்கு ஆங்கிலேய அரசின் சூழ்ச்சிகளை விளக்கியும் சுதந்திர உணர்வு ததும்பவும் சொற்பொழிவாற்றியதுடன், பாடமும் நடத்தினார்.
1924 கொல்கத்தா மாகாணத் தேர்தலில் வெற்றிப் பெற்று சுபாஷ் கொல்கத்தாவில் பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் அவரைக் கைது செய்து அவரை சிறையில் அடைத்தது. அங்கு அவருக்கு காசநோய் தாக்கியது, இருப்பினும் அவரை சிகிச்சைக்காகக் கூட வெளியே அனுப்ப மறுத்தது ஆங்கிலேய அரசு. பல்வேறு போராட்டங்கள், மக்க்ளிடம் ஏற்ப்பட்ட கொந்தளிப்பு ஆகிய காரணங்களாலும், நோய் முற்றி அவர் பிழைப்பதே அரிது என்று நம்பியதாலும் ஆங்கிலேய அரசு அவரை நிபந்தையின்றி விடுதலை செய்தது.1930ல் ஐரோப்பிய சுற்று பயணம் மேற்கொண்டார். பல தலைவர்களை சந்தித்தார்.
|
நேதாஜியும் ஹிட்லரும் |
“யாசகம் வேண்டிப் பெறுவது அல்ல, போராடிப் பெறுவதே சுதந்திரம்” என்ற எண்ணம் கொண்டவர் சுபாஷ். “உங்கள் ரத்ததை தாருங்கள் உங்களுக்கு விடுதலையை பெற்றுத் தருகிறேன்”என்று அறைகூவல் விடுத்தவர். இதனால் ஆரம்பத்திலேயே காந்திக்கும் போஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. பல இடங்களில் காந்தி எடுத்த தவறான முடிவுகளை சுபாஷ் எதிர்த்தார். சுயாட்சிக்கு காந்தி எதிர்ப்பு தெரிவித்த போது பலரும் அதை எதிர்த்து பேச தயங்கிய போது போஸ் எழுந்து அதை தவறு என்று சுட்டினார். ஜெனரல் டயரை சுட்டுக் கொன்ற உத்தம் சிங்கை பாராட்டி கடிதம் எழுதினார் போஸ், உத்தமின் அந்த வழி தவறு என்று எதிர்த்தார் காந்தி. இதனால் போஸ் திட்டமிட்ட ரீதியில் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்.
|
நேதாஜி - ஜின்னாவுடன் |
1939ல் மீண்டும் போஸ் காங்கிரஸ் தலைவராக தேர்தலில் போட்டியிட்டார், அவரை எதிர்த்து ராஜேந்திர பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடக் கோரினார் காந்தி. அவர்கள் மறுத்துவிட பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். அதில்
1580 வாக்குகள் வித்தியாசத்தில் போஸ் வெற்றிப் பெற்றார். அதை எதிர்த்து உண்ணாவிரதம்!! இருந்தார்!! காந்தி. அவரை சமாதானப்படுத்த தானே பதவி விலகினார் போஸ்.
ஃபார்வர்டு ப்ளாக் என்ற கட்சியைத் தொடங்கினார் சுபாஷ். அதன் அகில இந்திய தலைவராக அவரும், தமிழகத் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
1940 சமயத்தில் சுதந்திரப் போர் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. பாரத நாட்டு மக்களிடம் சுதந்திரத் தாகம் வீறு கொண்டெழுந்திருந்தது. அதே சமயம் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்திருந்தது. அப்போது ஆங்கிலேய அரசாங்கம் பாரத மக்களின் ஆதரவை வேண்டியது. ஆனால் போஸ் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டினார். அதனால் அவரை மீண்டும் சிறையில் அடைத்தது. அங்கிருந்து தப்பி சென்ற அவர் இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஹிட்லரின் அழைப்பின் பேரில் ஜெர்மனி சென்றார், அங்கே அவருக்கு சிறப்பான வரவேற்புத் தரப்பட்டது. இந்திய விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதியளித்தார்.
பின்னர் பெர்லினில் ஆசாத் ஹிந்த் என்ற பெயரில் வானொலி ஒலிபரப்புத் துவங்கியது.
3000 வீரர்கள் அடங்கிய போர்ப்படை தயாரானது ஜெர்மனியில். ஆனால்
1942ல் ஜெர்மனி படைகள் ரஷ்யாவில் புகுந்தவுடன் வரலாறு மாறியது. ஜெர்மானிய படைகள் தோல்வி கண்டு பின்வாங்கின, அதைப் பார்த்த போஸ் பாரத விடுதலைக்கு அங்கே எந்த உதவியும் கிடைக்காது என்று அங்கிருந்து ஜப்பான் வந்தார்.
ராஷ் பிஹாரி போஸால் தொடங்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி மீட்டு அதன் தலைவரானார். பர்மாவில் இருந்து இதனை இயக்கினார், நேதாஜி. ஆனால் ஆங்கிலேய படைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடியது நமது ராணுவம். இருப்பினும் மனம் தளராமல் பாரத எல்லை வரை முன்னேறியது. விதி வசமாக ஜப்பான் சரணடைந்ததால் இப்படை தோல்வியைத் தழுவியது. அப்போது காந்தி ஐ.என்.ஏ விற்கு ஆதரவு தந்திருந்தால் மிகச் சுலபமாக விடுதலை அடைந்திருக்கலாம்.
|
இந்திய தேசிய ராணுவம் |
அவர்
1945 ஆகஸ்ட் 18 அன்று ஜப்பானில் இருந்து தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாகவும். அவர் சென்ற விமானம் விபத்து ஏற்ப்பட்டு அவர் இறந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் அந்த நாளில் அப்படி ஒரு விபத்து பதிவு செய்ய படவில்லை என்று சமீபத்திய ஆய்வு தெரியப் படுத்துகிறது. இதனை இன்றைய பாரத அரசாங்கம் ஏற்கவில்லை. மேலும் அவர் உயிருடன் இருந்தார் என்று பலரும் நம்புகின்றனர். அவரைப் பற்றிய 33 கோப்புகள் அரசாங்க ரகசியமாக பிரதமர் அலுவலகத்தில் 75 ஆண்டுகளாக உள்ளது சந்தேகத்தை கூட்டுவதாக இருக்கிறது.
அவர் இறந்தாரா இல்லையா, அப்படி இறக்கவில்லை என்றால் எங்கிருந்தார்? இந்த கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைக்கவில்லை. அவருடைய மரணம் ஒரு மர்மமாகவே இருக்கிறது. அவர் இறந்தாரா என்பதை உறுதி செய்யாமல் அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை அப்படியே ஏற்றுக்கொண்டதும், அவரை காந்தி விரும்பாததும், காந்தியை தேச விடுதலை நாயகனாக ஆங்கிலேய அரசாங்கம் உருவகப்படுத்தியதையும் உற்று நோக்கும் போது இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பது கண்கூடு.
பாரத விடுதலைக்குப் பின் பிரிட்டன் பிரதமர் கிளமென்ட் அட்லீ கொல்கத்தாவிற்கு வருகைத் தந்திருந்த போது அவரிடம் அப்போதைய கொல்கத்தா நகர
தற்காலிக ஆளுநராக இருந்த தலைமை நீதிபதி திரு. சக்ரபோர்த்தி கேட்ட கேள்வியும் அவருடைய பதிலையும் மொழிபெயர்க்காமல் அப்படியே பதிவு செய்கிறேன்.
When B.P. Chakraborti
was acting as Governor of West Bengal, Lord Attlee visited India and stayed as
his guest at the Raj Bhavan for three days. Chakraborti asked Attlee about the
real grounds for granting independence to India. Specifically, his question
was, when the Quit India movement lay in shambles years before 1947, where was
the need for the British to leave in such a hurry. Attlee’s response is most
illuminating and important for history. Here is Governor Chakraborti’s account
of what Attlee told him:
“In reply Attlee
cited several reasons, the most important were the activities of
Netaji Subhas Chandra Bose which weakened the very foundation of the attachment
of the Indian land and naval forces to the British Government. Towards
the end, I asked Lord Attlee about the extent to which the British decision to
quit India was influenced by Gandhi’s activities. On hearing this question
Attlee’s lips widened in a smile of disdain and he uttered, slowly, putting
emphasis on each single letter— ‘mi-ni-mal’.”
இன்று சுதந்திர வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 117வது பிறந்த தினம். அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
வந்தே மாதரம்!!
|
தபால் தலை |
மேலதிக விவரங்களுக்கு:
History of the
Freedom Movement in India (Firma KLM, Calcutta) R C Majumdar, Volume III
pages 609 -10.