Monday, July 13, 2020

மகாபாரதம் பகுதி 14

அம்பா-அம்பிகா-அம்பாலிகா


அப்போது  காசி நாட்டு அரசன் தனது மகள்களான அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூவருக்கும் சுயம்வரம் செய்ய விருப்பம் கொண்டு அஸ்தினாபுரத்தை தவிர்த்து பல நாட்டு அரசர்களுக்கும் ஓலை அனுப்பினான். இந்தச் செய்தி ஒற்றர்கள் மூலம் பீஷ்மரின் காதுகளை சென்று அடைந்தது. 

பீஷ்மர் இதனை அஸ்தினாபுரத்துக்கு நேர்ந்த அவமானமாகக் கருதினார். அதனால், கோபம் கொண்டார். ராஜமாதா சத்தியவதியிடம் காசி இராஜனின் இச்செயலை எடுத்து உரைத்தார். அப்போது சத்யவதி, காசியின் அரசன் மீது பீஷ்மரைக் காட்டிலும் அதிக கோபம் கொண்டாள். 

சத்தியவதி பீஷ்மரிடம், "பீஷ்மா! காசி இராஜனின் மூன்று மகள்களையும் சிறை படுத்தி அழைத்து வா" என்றாள். ஆனால், பீஷ்மர் அதற்குத் தயங்கினார். அத்துடன் தாய் சத்தியவதியிடம், "தாயே! நானோ ஒரு பிரம்மச்சாரி, நீரோ பெண்களை கடத்தி வர சொல்கின்றீர். இது சரியா?" என்றார்.

ஆனால் இராஜ மாதா சத்தியவதி," பீஷ்மா! நான் உனது தாயின் ஸ்தானத்தில் இருப்பவள். அதனால் நான் சொன்னதை சரியா, தவறா என்று எல்லாம் ஆராயாமல் சொன்னதை மட்டும் செய். நமக்கு மட்டும் ஓலை அனுப்பாமல், பாரத கண்டத்தில் உள்ள அனைத்து அரசர்களுக்கும் ஓலை அனுப்பி இருக்கிறான் அந்தக் காசி ராஜன். இதனால் அவன் அஸ்தினாபுரத்தை அவமதித்து விட்டான். நாம் அவனை பதிலுக்கு அவமானப் படுத்த வேண்டும். அவமானத்துக்கு, அவமானமே வெகுமானம். அதனால், அவன் முன்பாகவே அவன் பெண்களை சிறை படுத்தி அழைத்து வா!" என்றாள்.

- தொடரும்

No comments:

Post a Comment