Friday, July 17, 2020

மகாபாரதம் பகுதி 18

பீஷ்மர் செய்த பாவம்

அம்பையின் சினம்


    சால்வனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட அம்பா தரையில் விழுந்த மீன் போலத் துடி, துடித்துப் போனாள். கதறினாள். அழுதாள். பிறகு சால்வனிடம்," அரசே! நான் நீர் சொல்வது போல பொருள் அல்ல, ஒரு உயிர் உள்ள பெண். ஆக, நீர் என்னை போரில் வென்ற ஒரு பொருளாக பாவித்து புறக்கணிப்பது நியாயமா? உம்மையே நம்பி வந்தேனே!" என்றாள்.

சால்வனோ அம்பாவிடம், "நீ என்னிடம் நியாய, அநியாயத்தை பற்றிப் பேசாதே. நான் உன்னிடம் இருந்து எதையும் கேட்கவும் விரும்பவில்லை. உனக்கு நியாயம் கேட்க வேண்டும் என்றால் போய், உன்னை அன்று சபையில் கவர்ந்த பீஷ்மனிடத்தில் கேள். இனி நீ என்னைப் பார்க்க இங்கு வராதே! நீ விரும்பிய சால்வன் எப்போதோ செத்து விட்டான். போ!" என்றான்.

அம்பா அழுது கொண்டே சௌபல நாட்டை விட்டு மீண்டும் அஸ்தினாபுரத்தின் அரண்மனையை அடைந்தாள். அப்போது சத்தியவதி, விசித்திர வீரியனுக்கு அம்பிகாவையும், அம்பாலிகாவையும் திருமணம் செய்து வைத்து, அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து கொண்டு இருந்தாள். 

அவர்கள் அனைவரும் கோபத்துடனும், வருத்தத்துடனும் வந்து நின்ற அம்பாவை பார்த்தார்கள். அப்போது அம்பாவிடம், அவள் வந்த காரணத்தைக் கேட்டாள் சத்தியவதி.  அம்பா சால்வனால் தான் நிராகரிக்கப்பட்டதை கூறி சத்தியவதியிடம் முறையிட்டாள்

அம்பா உடனே நடந்த அனைத்து விஷயத்தையும் சத்தியவதியிடம் கூறி முடித்தாள். அது கேட்ட சத்தியவதி சற்று நேரம் யோசித்து பின் அம்பாவிடம், "இதை எல்லாம், இப்போது நீ எங்களிடத்தில் சொல்வதேன்? நாங்கள் உன் விவகாரத்தில் என்ன செய்ய முடியும்? உனக்காக நாங்கள் அனுதாபப் படுகிறோம். எங்களால் அவ்வளவு தான் முடியும்" என்றாள். 

அது கேட்ட அம்பா, இன்னும் உக்கிரம் அடைந்தாள். பிறகு சத்தியவதியைப் பார்த்து, "யாருக்கு வேண்டும் உங்கள் அனுதாபம்? உங்கள் மகன் பீஷ்மனால் இப்போது எனது வாழ்வு அழிந்து கேள்விக் குறியாகப் போய் விட்டதே! இதற்கு ஒரே பரிகாரம் என்னைக் கவர்ந்து வந்த பீஷ்மன் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றாள்.

எனது மகன் பீஷ்மன் வாழ்க்கையில் பிரம்மச்சார்ய விரதத்தை கடைபிடித்து வாழ்பவன். அவனால் உன்னை திருமணம் செய்து கொள்ள இயலாது, 

சினம் கொண்ட அம்பா எனக்கு இன்று இந்த அவையில் நியாயம் கிடைக்க வேண்டும். பீஷ்மா நீயே எனக்கு ஒரு நியாயத்தை சொல்!" என்றாள்

- தொடரும்

No comments:

Post a Comment