தேவவிரதன் பீஷ்மர் ஆகுதல்
சூழ்ச்சி மற்றும் பேராசையின் மொத்த உருவமான அந்த மீனவத் தலைவன் ராஜா சந்தனுவின் வார்த்தையை கேட்டு சற்றே யோசித்தான். பிறகு சந்தனுவிடம்," ஏ ராஜன்! தெய்வத்தின் அருளால் எனக்குக் கிடைத்த அருமை மகள் அவள். நான் அவளை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை" என்றான்.
"உனது நிபந்தனை என்ன?" என்றான் சந்தனு.
அதனைக் கேட்ட சந்தனு, "எனது ஆசைக்காக இளவரசன் தேவவிரதனின் உரிமையை மறுப்பதா? இது அநியாயம் அல்லவா?" என்று தனக்குள் சிந்தித்தவனாக அம் மீனவத் தலைவனிடம் எதுவும் பேச விரும்பாமல் தனது ரதத்தில் ஏறி அஸ்தினாபுரத்தின் அரண்மனைக்குத் திரும்பினான்.
அவ்வாறு அஸ்தினாபுரத்தின் அரண்மனைக்குத் திரும்பிய சந்தனு கவலை கொண்ட முகத்துடன் சத்தியவதியின் நினைவாகவே இருந்தான். தந்தை எப்போதும் போல இல்லாமல் கவலை கொண்ட முகத்துடன் இருப்பதைக் கண்டான் தேவவிரதன். உடனே தந்தையின் தேரோட்டியை அழைத்தான், அவன் மூலம் நடந்ததை அறிந்தான். மறுகணம், தனது தேர் சாரதியை அழைத்து உடனே யமுனையின் அக்கறைக்கு மீனவத் தலைவனை பார்க்கச் சென்றான்.
![]() |
| பீஷ்ம சபதம் |
- தொடரும்

No comments:
Post a Comment