என் சிறு வயதிலிருந்தே என் காதலியை எனக்கு தெரியும். அப்போதெல்லாம் அவளை எனக்கு பிடிக்காது, ஏனென்றால் அவள் காரணமாக என் அப்பாவிடம் நிறைய திட்டும், கொட்டும் வாங்கியிருக்கிறேன். நான் துன்பப்படுவதைக் கண்டும் அவள் சிரித்துக் கொண்டிருப்பாள்.
ஆரம்பத்தில் எனக்கு அவளை பிடிக்கவில்லை என்றாலும் அவள் என்னை விடவில்லை. காதல் விசித்திரமானது, அது யாரிடம் எப்போது வரும் என்று தெரியாது. அவளிடம் எனக்குண்டானக் காதல் நாளொரு கொட்டும், பொழுதொரு திட்டுமாக வளர்ந்து வந்தது. நிதம் காலை அவளைக் காணாமல் விடிந்ததில்லை.
பெற்றோர் பார்த்து செய்த, திருமணத்திற்குப் பின் ஏற்படும் காதல் போன்றது, அவளிடம் எனக்குண்டான காதல். அவளை அதிகம் படிக்கப் படிக்க அவள் மெல்ல மெல்ல என் இதயத்தில் வாடகைக் கூடத் தராமல் குடியேறிவிட்டாள்.
இன்று வரை வாடகை வாங்க முடியவில்லை.. ரொம்ப பீடிகை போடாதே சீக்கிரம் சொல்லு யார் அந்த பொன்னு என்று நீங்க கேக்கரது புரியுது. அந்த பொன்னு யார்னா... தமிழ் தான்.
சத்தியமா நம்ம தமிழ் மொழியை தாங்க சொல்றேன். சின்ன வயசுல நா எப்படி தமிழ் கத்துகிட்டேன் என்பதே ரொம்ப சுவாரசியமான தகவல் (ஆமா இவர் தமிழ் கத்துகிட்டது பெரிய சரித்திரம்!!! அத பதிவு வேற செய்றான்)
தினசரி காலைல ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு 6.30 க்கு என் அப்பா கூட்டிட்டு போவார். அன்னிக்கு காலைல வந்த தினத்தந்தி எனக்காகவே, நா தப்புத் தப்பா படிக்கவே, அயர்ன் செஞ்சு வச்ச மாதிரி மடிப்புக் கலையாம காத்துக்கிட்றுக்கும்.
நானும், " உன் பேர் என்ன ?" எனும் கேள்விக்கு "நான் நாலாவது படிக்கிறேன்" னு சொல்லும் தெளிவோடு போவேன். அந்த "தினத்தந்தி" அப்டீன்ற அந்த வார்த்த எனக்கு வரவே வராது. அத சொல்றதுக்கு நா பட்ட கஷ்டம் இருக்கே,
"தினத்தந்தியும் நான் தினம் வாங்கிய கொட்டுகளும்" னு ஒரு புக்கே போடலாம்.
ஆனால் அதை ஒரு போட்டியா எடுத்து நல்லா தமிழ் படிக்கக் கத்துக்கிட்டேன். என் அப்பா தான் என்னோட முதல் குரு. தமிழ் மேல் என்னோட காதல், பல முறை தோற்று அதன் பின் கடைசியாகக் கிடைத்த வெற்றி போன்றது.
அதனால் தமிழ் என் மனதில் நீங்காத இடம் பெற்றது. அவள் தான் என் காதலி, என்றும் அழியாத இளமையுடன் இருக்கும் காதலி...
ஆரம்பத்தில் எனக்கு அவளை பிடிக்கவில்லை என்றாலும் அவள் என்னை விடவில்லை. காதல் விசித்திரமானது, அது யாரிடம் எப்போது வரும் என்று தெரியாது. அவளிடம் எனக்குண்டானக் காதல் நாளொரு கொட்டும், பொழுதொரு திட்டுமாக வளர்ந்து வந்தது. நிதம் காலை அவளைக் காணாமல் விடிந்ததில்லை.
பெற்றோர் பார்த்து செய்த, திருமணத்திற்குப் பின் ஏற்படும் காதல் போன்றது, அவளிடம் எனக்குண்டான காதல். அவளை அதிகம் படிக்கப் படிக்க அவள் மெல்ல மெல்ல என் இதயத்தில் வாடகைக் கூடத் தராமல் குடியேறிவிட்டாள்.
இன்று வரை வாடகை வாங்க முடியவில்லை.. ரொம்ப பீடிகை போடாதே சீக்கிரம் சொல்லு யார் அந்த பொன்னு என்று நீங்க கேக்கரது புரியுது. அந்த பொன்னு யார்னா... தமிழ் தான்.
சத்தியமா நம்ம தமிழ் மொழியை தாங்க சொல்றேன். சின்ன வயசுல நா எப்படி தமிழ் கத்துகிட்டேன் என்பதே ரொம்ப சுவாரசியமான தகவல் (ஆமா இவர் தமிழ் கத்துகிட்டது பெரிய சரித்திரம்!!! அத பதிவு வேற செய்றான்)
தினசரி காலைல ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு 6.30 க்கு என் அப்பா கூட்டிட்டு போவார். அன்னிக்கு காலைல வந்த தினத்தந்தி எனக்காகவே, நா தப்புத் தப்பா படிக்கவே, அயர்ன் செஞ்சு வச்ச மாதிரி மடிப்புக் கலையாம காத்துக்கிட்றுக்கும்.
நானும், " உன் பேர் என்ன ?" எனும் கேள்விக்கு "நான் நாலாவது படிக்கிறேன்" னு சொல்லும் தெளிவோடு போவேன். அந்த "தினத்தந்தி" அப்டீன்ற அந்த வார்த்த எனக்கு வரவே வராது. அத சொல்றதுக்கு நா பட்ட கஷ்டம் இருக்கே,
"தினத்தந்தியும் நான் தினம் வாங்கிய கொட்டுகளும்" னு ஒரு புக்கே போடலாம்.
ஆனால் அதை ஒரு போட்டியா எடுத்து நல்லா தமிழ் படிக்கக் கத்துக்கிட்டேன். என் அப்பா தான் என்னோட முதல் குரு. தமிழ் மேல் என்னோட காதல், பல முறை தோற்று அதன் பின் கடைசியாகக் கிடைத்த வெற்றி போன்றது.
அதனால் தமிழ் என் மனதில் நீங்காத இடம் பெற்றது. அவள் தான் என் காதலி, என்றும் அழியாத இளமையுடன் இருக்கும் காதலி...