Wednesday, July 1, 2020

மகாபாரதம் பகுதி 2

சந்திர வம்சம்

        ஸ்ரீ இராமரது சூரிய குலம் திரேதா யுகத்துடன் முடிந்ததாகக் கொண்டால், துவாபர யுகத்தை நெருங்கும் காலம், இந்த ஒட்டு மொத்த பாரத தேசத்தையும் சந்திர வம்சத்தினர் ஆண்டார்கள். இவர்களைத் தான் பிற்காலத்தில் பரத வம்சம் என்றும் குரு வம்சம் என்றும் அழைத்தனர். 

இந்தச் சந்திர வம்சத்தின் பூர்வ சரித்திரம் பாரத இதிகாசத்தில் விஸ்தாரமாய் விவரிக்கப்பட்டுள்ளது. அவ்வம்சத்தின் சுருக்கமான வரலாறு பின்வருமாறு:

"முதலில் சந்திரன் என்பவன் புதனைப் பெற்றான். புதன் புரூருவனைப் பெற்றான். புரூருவன் ஊர்வசியுடன் கூடி ஆயு என்பவனைப் பெற்றான். ஆயுவுக்கு நகுடன் பிறந்தான். இந்த நகுடன் அரசாண்ட போது பெற்ற மூன்று ஆண் மக்களில் மூத்த புதல்வனின் பெயர் யயாதி. மூத்தவனாகப் பிறந்ததால் அவனே ஆட்சி உரிமையை பெற்றான். மேற்கொண்டு இந்த யயாதி முதல் துக்ஷ்யந்தன் வரையுள்ள 11 தலைமுறைகள் கீழ்க்கண்டவாறு முறையே விவரிக்கப்படுகின்றன :

யயாதி – புரூருவன் – ஜனமேஜயன் – பிரசாவன் – சாயதி – சார்வபெளமன் – அரிசிகன் – மதிவான் – திடன் – நீலன் – துக்ஷ்யந்தன் ஆவார்கள்.

இதில் துக்ஷ்யந்தன் மகாராஜனுக்குச் சகுந்தலையிடம் பரதன் பிறந்தான். பரதனின் மகன் பெளமன், இவன் மகன் சுகோத்திரன்; இவன் மகன் அஸ்தன். இந்த அரசனால் ஏற்பட்ட நகரத்துக்கு அஸ்தினாபுரம் என்று பெயர். 

இவனுக்கு நிகும்பன் பிறந்தான். அவனிடம் அரசமீளி பிறந்தான். அவனுக்கு வருணன் பிறந்தான். வருணனிடம் குரு உற்பவித்தான். இந்தக் குரு அரசனால் பரத வம்சத்தினர் "கெளரவர்” என்ற பெயர் பெற்றனர். இவன் யாகஞ் செய்த இடத்திற்கும், அரசாண்ட நாட்டிற்கும், குருக்ஷேத்திரம் என்ற பெயர் வந்தது.



- தொடரும்

No comments:

Post a Comment