Friday, December 24, 2021

புதிய தேர்தல் சட்டம் - ஒரு பார்வை

தேர்தல் சட்டத் திருத்த மசோதா, 2021:

1. ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க, வழிவகை செய்யப் பட்டு உள்ளது.

2. 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள், தங்களது பெயர்களை பதிவு செய்ய, ஜனவரி 1 என ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வாய்ப்பு வழங்கப் பட்டு வந்தது. இனி அது, வருடத்திற்கு நான்கு முறையாக ஜனவரி – 1, ஏப்ரல் – 1, ஜூலை- 1, அக்டோபர் – 1, என மாற்றம் செய்யப் பட்டு உள்ளது.

3. பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள், தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று வாக்கு அளிக்க முடியாத சூழ்நிலையில், அவரின் வாக்கை அவரது மனைவி செலுத்த முடியும். ஆனால், பணியில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு பதிலாக, அவரது வாக்கை, அவரின் கணவர் செலுத்த, சட்டத்தில் இடம் இல்லாமல் இருந்தது. இத்தகைய நடைமுறை மாற்றப் பட்டு, இனி கணவர்களுக்கும், அந்த உரிமை அளிக்கப் பட்டு உள்ளது.

4. ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு வசதியாக, எந்த இடத்தையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய அதிகாரத்தை, தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இத்தகைய நான்கு தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள், தற்போது நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப் பட்டு உள்ளது.

மேலும் படிக்க : https://mediyaan.com/electoral-reform-bill-to-link-aadhaar-voter-id/

Thursday, December 23, 2021

தற்காப்பு, தவறா?

ஆச்சார்யா ஓஷோ ரஜனீஷை அவரது சீடர் ஒருவர் விசாரித்தார்.

கேள்வி - வீடுகள் மற்றும் சொத்துக்கள் எரிக்கப்படும் போதும், ​​ஜிஹாதிகளால் கொலைகள் செய்யப்படும் போதும் நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் இந்து முஸ்லீம் சகோதரத்துவத்தை ஊக்குவிக்க வேண்டுமா அல்லது எங்கள் சொந்த பாதுகாப்பிற்காக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமா, தயவு செய்து வழிகாட்டவும்.

பதில் - உங்கள் கேள்வி உங்கள் முட்டாள்தனத்தை சொல்கிறது, நீங்கள் வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. மஹ்மூத் கஜ்னாவி சோம்நாத் கோயிலைத் தாக்கியபோது, ​​சோம்நாத் அந்தக் காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பணக்கார கோவிலாக இருந்தது. அந்த கோவிலில் வழிபட்ட 1200 இந்து பூசாரிகள் நாங்கள் தியானம், பக்தி, வழிபாடு, என இரவும் பகலும் ஈடுபடுகிறோம் எனவே கடவுள் நம்மை பாதுகாப்பார், என நினைத்தனர். அவர்கள் பாதுகாப்பிற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை, மாறாக, தங்களை பாதுகாத்து வரும் அந்த க்ஷத்திரியர்களைக் கூட மறுத்தனர்.

இதன் விளைவாக, மஹ்மூத் ஆயிரக்கணக்கான நிராயுதபாணியான இந்து பூசாரிகளைக் கொன்றான், சிலைகள் மற்றும் கோவில்களை உடைத்தான். மற்றும் நிறைய செல்வம், வைரம், நகைகள், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை எடுத்துச் சென்றான்.

கடவுளின் தியானம் மற்றும் பக்தி வழிபாடுகளால் அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

இன்று, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், அதே முட்டாள்தனம் தொடர்கிறது, உங்கள் முன்னோர்களின் வாழ்க்கையிலிருந்து நீங்கள் எதையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

பொல்லாதவர்களின் இதயத்தை மாற்றும் அளவுக்கு தியானத்திற்கு இவ்வளவு சக்தி இருந்தால், ராமச்சந்திரன் ஏன் எப்போதும் அவனுடன் வில் மற்றும் அம்பை வைத்திருக்க வேண்டும். தியானத்தின் சக்தியால், அவர் ராக்ஷாஸ் மற்றும் ராவணனின் இதயத்தை மாற்றியிருப்பார், அவர்களை சூர்-அசுர சகோதரர்கள் மற்றும் சகோதரர்கள் என்று விளக்கி, சண்டை முடிவுக்கு வந்திருக்கும், ஆனால் ராமரால் கூட யாருக்கும் விளக்க முடியவில்லை, ராமர்-ராவணனின் போரின் முடிவு ஆயுதத்தால் தீர்மானிக்கப்பட்டது.

தியானத்திற்கு அதிக சக்தி இருந்தால், அது மற்றவர்களின் மனதை மாற்றும். பூர்ணாவதரர் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் கம்சனையும் ஜராசந்தனையும் கொல்ல வேண்டும்! அவர் அவர்களை தியானத்தால் மட்டுமே மாற்றியிருக்கலாம்.

தியானம் மற்றொருவரின் மனதை மாற்றும் சக்தி பெற்றிருந்தால், மகாபாரதப் போர் இருக்காது, கிருஷ்ணர் தனது தியானத்தின் சக்தியால் துரியோதனனை மாற்றியிருப்பார், மேலும் போர் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், மாறாக, கிருஷ்ணர் தியானம் செய்ய விரும்பும் அர்ஜுனனை நிறுத்தி அவரை போரில் ஈடுபடுத்தினார்.

இராமகிருஷ்ண பரமஹம்சரும், விவேகானந்தரும் 130 வருடங்களுக்கு முன்புதான் வாழ்ந்தனர். அவர்களோ தியானத்தின் வலிமையால் கடவுளை நெருங்கியவர்கள். இவர்கள் இருக்கும் காலத்தில்தான் மக்கள் அனைவரும் மரணங்கள் நிறைந்த போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். ஏன் இதை தியானத்தின் வலிமையால் சரிசெய்ய முடியவில்லை. விவேகானந்தர் இதை உணர்ந்திருந்தார். அவரின் கருத்துகளில் இதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

கோரக்நாத் முதல் ராய்தாஸ் மற்றும் கபீர் முதல் குருநானக் வரை குரு கோபிந்த் சிங் வரை கடந்த 1200 ஆண்டுகளில் இந்தியாவில் எத்தனை மஹரிஷி மகான்கள் இருந்தார்கள் அந்த புனிதர்களின் போதனைகள் படையெடுப்பாளர்களை மாற்ற முடியவில்லை. குருநானக் தனது மதம் பற்றிய தத்துவத்தை முஸ்லிம்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அவரை ஒருங்கிணைக்கும் வகையில் கொடுத்தார். ஆனால் அதே குரு பாரம்பரியத்தில், குரு கோபிந்த் சிங் முஸ்லிம்களுக்கு எதிராக வாளை எடுக்க வேண்டியிருந்தது, இந்து மதத்தைப் பாதுகாக்க, நிராயுதபாணியான சீக்கியர்கள் ஆயுதம் ஏந்த வேண்டியிருந்தது.

தியானம் ஒருவரின் சொந்த உணர்வை மாற்றும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆனால் நாம் இந்த விஷயத்தை (உடல்) பாதுகாக்க வேண்டும், அதற்காக நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியை எடுக்க வேண்டும்.

நம் முன்னோர்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வது அவசியம். நாம் யாரையும் வெறுக்க வேண்டியதில்லை, குறைந்தபட்சம் நம்மை வெறுப்பவர்களை அடையாளம் கண்டு கொண்டாலே போதுமே. நாம் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மனம் உடையவர்கள், அது நம்மை பலவீனர்களாக ஆக்காமல் பார்த்துக் கொள்ளலாமே.

வெற்றிவேல் வீரவேல்

Wednesday, December 22, 2021

குழந்தைகளை திட்டுங்கள்!!

இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள்.

  1. ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், "டீச்சர் திட்டினார்", "அம்மா முறைத்தாள்", "அப்பா அடிக்க கையை ஓங்கினார்" எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்.
  2. பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக் கொள்வார்கள்.
  3. தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம். அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள்

அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை.

"குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?" என்ற கேள்வியை, குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்.

ஒரு தலைமுறை முன்பு வரை நம்மைப் பெற்றோர் திட்டித் தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்?

பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதற்கு சமம்.

இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத் திறனும் நினைவுத் திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாட வேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்ட வேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.

அதைவிடுத்து, "நான் தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது" என இருந்தால், உங்கள் குழந்தை மனதளவில் பூஞ்சையாக இருக்கும். இதுதான் நீங்கள் வேண்டுவதா?

சில நாள்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், "அம்மா டி.வி. பார்க்க விடுவதில்லை. ஏன் படிக்கலைன்னு கேள்வி கேட்கிறார். அதனால் அவருக்கு ஒரு லெஸன் டீச் பண்ணணும்னு, ஆரஞ்சு ஜூஸ்ல விஷம் கலந்து தற்கொலை செஞ்சுக்க டிரை பண்ணினேன்" என்று பள்ளிச் சிறுமி சொல்லியிருக்கிறாள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா?

சிறு வயதிலிருந்து "ஏய்" என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று "பிள்ளை கைமீறிப் போகிறதே" என்ற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள். அல்லது இந்தச் சிறுமிபோல, பெற்றவர்களையே தற்கொலை என்ற பெயரில் மிரட்டத் துணிகிறார்கள்.

மேலே சொன்ன சிறுமி போல் இல்லாமல், பெற்றோரடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக் கொள்வார்கள்.

குழந்தைகளைத் தண்ணீர் போல வளர்க்க வேண்டும். அப்போது தான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள்.

  1. ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக் கொள்வது.
  2. அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பது.
  3. தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது.
  4. மற்றவர்களை மன்னிப்பது.
  5. தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது.

போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் வளர்ப்பது அவசியம்.

இளஞ்செடியாக இருக்கும் போது வேலி போடுவது தான் புத்திசாலித் தனம். பிள்ளைகள் மரமான பிறகு வேலியைக் கட்டுவது சுலபமில்லை.

எனவே, "அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க" என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள்.

Saturday, December 18, 2021

நட்சத்திர பிறந்த நாள்

பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் கவனத்திற்கு!

நீங்கள் ஏன் இன்னொருவர் பிறந்த நாளை உங்கள் பிறந்த நாளாகக் கருதி கொண்டாட வேண்டும்?!!

ஒவ்வொருவருக்கும் தாம் பிறந்த நாளென்பது மிக முக்கியமான மறக்கவியலாத ஒரு நாளாகும். ஒவ்வொரு வருடமும் அந்த நாள் கோவிலுக்கு சென்று வருவது இயலாதோருக்கு அன்னதானம் வழங்குவது ஆடைகள் தானம் வழங்குவது மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட நல்ல நிகழ்வுகளில் ஈடுபட்டு அதை மகிழ்வானதாக்கிக் கொள்வதும் இயற்கை தான்.

நம் கலாச்சாரத்தில்நம் பிறந்த நாளை (தேதியை) விட நாம் பிறந்த பொழுது நடப்பிலிருந்த நட்சத்திரம்தான் மிக முக்கியமானதாகும்.

ஆம் ஒருவர் 09.4.2021 நாளில் பிறக்கிறாரென்றால்,‌ இந்த தேதியை விட‌ இந்த நாளில் நடப்பிலிருக்கும் நட்சத்திரமான (மாசிமாதம் தேய்பிறை சதய நட்சத்திரம்) என்பதுதான் மிக முக்கியமாகும்.

அவர் அடுத்த ஆண்டு தன் பிறந்த நாளை கொண்டாட நினைத்தால் அந்த ஆண்டில் மாசி மாதம், சதய நட்சத்திரம் வரும் நாளில் தன் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் அது தான் சரியாக இருக்கும்‌ அதை விடுத்து 09.04.2022 அன்று தேதியை முதன்மைப்படுத்தி தன் பிறந்த நாளைக் கொண்டாடினால் அன்று‌ அவர் பிறந்த நட்சத்திரம் நிச்சயமாக இருக்காது அது இன்னொருவர் பிறந்த நாளை நம்முடைய பிறந்த நாளாக கருதி கொண்டாடுவது போலாகிவிடும்.

இன்னும் விளக்கமாக பார்ப்போம்

உதாரணமாக கிறிஸ்மஸ் பண்டிகை எல்லா ஆண்டுமே டிசம்பர் 25ஆம் நாள் தான் வரும்

ஆனால் நமது பண்டிகைகளான தீபாவளி, திருகார்த்திகை தீபம் மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஆவணி அவிட்டம், வைகாசி விசாகம், தைப்பூசம் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட எந்த விசேஷ நாட்களுமே வருடா வருடம் குறிப்பிட்ட ஒரே தேதியில் வராது அந்தந்த தமிழ் மாதங்களின் நட்சத்திர கணக்கீட்டின்படியே மாறி மாறி வரும்‌ அப்படியிருக்க நாமும் நம்முடைய பிறந்த நாளையும் மேற்கத்திய கலாச்சாரத்தின் படி வருடாவருடம் குறிப்பிட்ட தேதியிலேயே கொண்டாடுவதென்பது அறிவார்ந்த செயலாக இருக்காதல்லவா…!?!!

எனவே இனியேனும் இந்த விபரங்களை வீட்டில் உள்ளோருக்கும் நன்கு புரியும்படி விளக்கி அடுத்து வரும் ஆண்டில் நாம் பிறந்த மாதத்தில் வரும்…‌ நமது பிறந்த நட்சத்திரத்தை நம் பிறந்தநாளாக அனுஷ்டிப்போம்.

தவிர நம்முடைய கலாச்சாரத்தில் நல்ல நாட்களில் சுப நிகழ்வுகளில் விளக்கை ஏற்றிவைத்து துவங்குவதும் வழிபடுவதுமே வழக்கம் அவ்வாறிருக்க சுப நாளில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அதையும் அபசகுனமாக வாயால் ஊதி அனைத்து உணவுப்பொருளை கத்தியால் வெட்டி மற்றவர்கள் வாயில் திணிப்பது இப்படி அனைத்துமே மிக தவறான நடவடிக்கைகளாகும்

எனவே அடுத்த முறை உங்களது பிறந்த நாளை. அதற்குரிய தமிழ் மாத நட்சத்திரத்தில் முன்னதாக பார்த்து அறிந்து உங்கள் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி இறை பதிகங்கள், மந்திரங்களை உச்சரித்து கோவிலுக்குச் சென்று உங்கள் பெயரில் நட்சத்திரத்தோடு அர்ச்சனை செய்து,. பூசனை செய்து முறையாக வழிபட்டு பலனடைய வேண்டும்.

இந்த நல்ல தகவலை 10 ஹிந்துச் சொந்தங்களுக்கு பகிர்வது கூட ஒரு நல்ல புண்ணிய காரியம்தான்.

Friday, December 17, 2021

ஷுப்ரக்கும் குத்புதீனும்

குத்புதீன் குதிரையில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோம்.இது எல்லோருக்கும் தெரியும்..!

ஆனால் எப்படி இறந்தார் என்ற வரலாறு மறைக்கப்பட்டு விட்டது..!

எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!

நண்பர்களே இன்று கேளுங்கள் "ஷுப்ரக்" வரலாறு..!

குத்புதீன் ராஜபுதனத்துடன் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் அதை மீறி சூழ்ச்சியால் உதய்பூரின் இளவரசர் ராஜ்கன்வர் கர்ணசிங்கை கைது செய்து லாகூருக்கு அழைத்துச் சென்றார்.

ராஜ்கன்வருக்கு "ஷுப்ரக்" என்ற சுவாமி பக்தி உள்ள வீரமான குதிரை இருந்தது.

குத்புதீன் அந்த குதிரையை மிகவும் விரும்பி அதை அவருடன் கொண்டு போனார்.

ராஜ் கன்வருக்கு சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்கு தண்டனை கொடுப்பதற்காக ஜன்னத் பாக் எனப்படும் மேடைக்கு அழைத்துச் சென்றனர்..!

இளவரசனின் தலை வெட்டப்பட்டு தலையை 'போலோ' விளையாட முடிவு செய்யப்பட்டது (அந்த விளையாட்டின் பெயர் மற்றும் விளையாடும் விதம் வேறு)..

குத்புதீன் தானே ராஜ்கன்வர் மரணத்தைப் பார்க்கக் குதிரை 'ஷுப்ரக்' மீது சவாரி செய்து தனது அணியுடன் ஜன்னத் பாக் க்கு வந்தார்.

'ஷுப்ரக்' குதிரை கைதியாக இளவரசர் ராஜ்கன்வரை பார்த்தவுடன்,குதிரையின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது…!

ராஜ்கன்வர் தலையை வெட்ட சங்கிலிகள் அகற்றப்பட்டு தலையை திறந்தவுடன்.

'ஷுப்ரக்' குதிரை தன்மீது அமர்ந்திருந்த குதுபுதீனை தரையில் தள்ளிக் கீழே வீழ்த்தியது. அத்துடன் குதுபுதீனின் மார்பை தன் வலுவான கால்களால் தாக்கியது..!

அதிபயங்கர தாக்குதலால் அங்கேயே குத்புதீன் உயிர் பிரிந்தது..! இதை இஸ்லாமிய படைவீரர்கள் கண்டு வியப்படைந்தனர்..! வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இளவரசர் ராஜ்கன்வர் சுற்றி இருந்த வீரர்களிடமிருந்து தப்பித்து 'ஷுப்ரக்' மீது சவாரி செய்தார்..!

'ஷுப்ரக்' காற்றுடன் பந்தயம் கட்டிப் பறப்பது போல் பறந்தது..

லாகூரிலிருந்து உதய்பூருக்கு நிற்காமல் ஓடி, உதய்பூரில் அரண்மனை முன் நின்றது..!

இளவரசன் குதிரையில் இருந்து இறங்கி தன் பிரியமான குதிரை ஷுப்ரக்கை துடைக்கக் கை நீட்டினான்…

ஆனால் ஷுப்ரக் சிலையாக நின்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சியானார்.. ஆம் ஷுப்ரக் கின் உயிர் பிரிந்திருந்தது…!

தலையில் கை வைத்த உடனே 'ஷுப்ரக்' உடல் உருண்டது..!

இந்த உண்மை இந்திய வரலாற்றில் எங்கும் கற்பிக்கப்படவில்லை..!

ஏனெனில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கைகூலி எழுத்தாளர்கள் தங்கள் எஜமானரின் இழி துயரமான மரணத்தைச் சொல்லத் தயங்கினார்கள்..!

ஆனால் பெர்சியனின் பல வரலாற்றுப் புத்தகங்களில் குத்புதீன் மரணம் இப்படித்தான் விவரிக்கப்பட்டுள்ளது..!

சுவாமி பக்தர் மாவீரன் 'ஷுப்ரக்' க்கு வீர வணக்கம்..!

ஒரு குதிரைக்கு இருந்த தேசபக்தி கடமை உணர்வு கூட இங்குள்ள கம்யூனிச வாதிகளுக்கும் திராவிட வாதிகளுக்கும் இல்லை என்பது உண்மை

ஜெய் ஹிந்த்..!

நேர்மை

 "நாளைக்கு பீஸ் கொண்டாரலைன்னா, டியூஷனுக்கு வர வேண்டாம்ன்னு சார் சொல்லிட்டார்.” ஏழு வயது தங்கராசு, அம்மா அருக்காணியிடம் சொன்னான். அருக்காணி வருத்தத்தோடு காலண்டரை பார்த்தாள்.

இன்று தேதி 25. ஒன்றாம் தேதி வராமல், அவள் ஒன்றும் செய்ய முடியாது.

அவள் மூன்று வீடுகளில் வேலை பார்க்கிறாள். இரண்டு வீடுகளில், அட்வான்சாக, இப்போதே பாதி சம்பளம் வாங்கியாகி விட்டது.

மூன்றாவது வீட்டு எசமான், வேலைக்கு சேரும் போதே, அட் வான்ஸ் எல்லாம் கேட்கக் கூடாதென்று கறாராகச் சொல்லி இருந்தார்.

அவள் கணவன் குடிகாரன். ஜேப்படித் திருடனும் கூட. இப்போது ஜெயிலில் இருக்கிறான். வெளியே வர ஆறு மாத மாகும். ஆனால், வந்தும் அவளுக்குப் பெரிய உபகாரமாக இருக்கபோவதில்லை. அவனுக்கும் சேர்த்து, அவள் தான் செலவு செய்ய வேண்டும்.

ஒரே மகன் தங்கராசு, படிப்பில் கொஞ்சம் மக்கு. டியூஷன் போனால் நல்ல மார்க் வாங்குகிறான். போகா விட்டால், எல்லா பாடங்களிலும் நாற்பதைத் தாண்டுவதே கஷ்டம் தான். அவனாவது நன்றாகப் படித்து உருப்பட வேண்டும் என்று, அவளும் படாதபாடு படுகிறாள்.

ஆனால், மாத வருமானத்தில் பாதி, வீட்டு வாடகைக்கே போய் விடுகிறது. மீதியில் வீட்டு செலவை சமாளிக்க, இன்றைய விலைவாசி ஒத்துழைக்க மறுக்கிறது.

ஒன்றாம் தேதி தர வேண்டிய டியூஷன் பீஸ் நூறு ரூபாயை, இருபத்தைந்தாம் தேதி வரை தராவிட்டால், அந்த டியூஷன் வாத்தியாரும்தான் என்ன செய்வார் பாவம். "அவருக்கும் குடும்பம் என்ற ஒன்று இருக்கிறதே…" என்று அருக் காணிக்குத் தோன்றியது.

அவர் மேல் தப்பு சொல்ல அவளுக்குத் தோன்றவில்லை.

"இந்தப் பாழாப்போன மனுஷன் மட்டும் ஒழுங்கா இருந்தா, இப்படி ஒவ்வொண்ணுக்கும் நான் கஷ்டப்பட வேண்டியதில்லை…" என்று விரக்தியுடன் வாய் விட்டுச் சொன்னாள். (பெண்ணாகப் பிறந்து விட்டாளே..!)

தங்கராசு இந்தக் காலக் குழந்தைகளுக்கே உரிய சுட்டித்தனத்துடன் அவளைக் கேட்டான். “”நான் நாளைக்கு டியூஷன் போகலாமா, வேண்டாமா அதை சொல்லு முதல்ல.”

அருக்காணி பெருமூச்சு விட்டாள்…

வேறு வழியில்லை. அட்வான்ஸ் தர முடியாது என்று சொன்ன, அந்த மூன்றாவது வீட்டுக்கார எசமானைத் தான், ஏதாவது மன்றாடி அட்வான்ஸ் பணம் வாங்கி, இவனை நாளைக்கு டியூஷனுக்கு அனுப்ப வேண்டும்… என்று நினைத்துக் கொண்டாள்.

இரண்டு வருஷமாய், அவர் வீட்டில் வேலை பார்க்கிறாள். இந்த ஒரு தடவையாவது அவர் உபகாரம் செய்தால் நன்றாக இருக்கும்.

அவருடைய மனைவி கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், அந்த அம்மாள் ஊருக்குப் போயிருக்கிறாள். இப்போது போய் அந்த வீட்டில் பாத்திரம் கழுவி விட்டு வர வேண்டும்.

எதற்கும் பையனையும் அழைத்துக் கொண்டு போய் கேட்டுப் பார்க்கலாம் என்று அருக்காணி முடிவு செய்து, அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

போகும் போதே தங்கராசு கேட்டான். "அந்த ஆள் தர மாட்டேன்னு சொன்னா என்ன செய்யறது?”

"வாயை மூடிட்டு வாடா. போறப்பவே அபசகுனமாய் பேசாதடா."

அந்த வீட்டு சொந்தக்காரர், வராந்தாவில் உட்கார்ந்து, அவர் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவள் தங்கராசுவை கூட்டி வந்ததைப் பார்த்தவுடனேயே, அவர் முகம் சுளித்தார்.

“உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது, பையனை எல்லாம் கூட்டிக்கிட்டு வரக் கூடாதுன்னு.”

இல்லை எசமான். ஒரு ஓரமா சும்மா உக்காந்துக்குவான். குறும்பு செய்ய மாட்டான். வேண்டா வெறுப்பாய் அவர் தலையசைத்தார்.

மகனை வேகமாக இழுத்துக் கொண்டு, வீட்டுக்குள்ளே சென்று, அவனை ஒரு இடத்தில் தரையில் உட்கார வைத்தாள்.

சமையலறையில் இருந்த பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில், இரண்டு காபி தம்ளர்ளை கழுவப் போட, அந்த வீட்டுக்காரர் உள்ளே வந்தார்.

தனியாகப் பேசக் கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் மெல்ல கேட்டாள் அருக்காணி.

"எசமான் ஒரு சின்ன உதவி"

"என்ன?”

"அட்வான்சா, ஒரு நூறு ரூவா குடுத்தீங்கன்னா உதவியா இருக்கும். பையனுக்கு டியூஷன் பீஸ் தரணும்.”

"ஆமா, உன் பையன் படிச்சு கலெக்டர் ஆகப் போறான். டியூஷன் பீஸ் கேட்கறா. நான் முதல்லயே உன்கிட்ட சொல்லி இருக்கேன். அட்வான்சு, கடன்னு எல்லாம் என் கிட்ட கேட்கக் கூடாதுன்னு,” அவர் நிற்காமல் சப்தமாகச் சொல்லிக் கொண்டே போய் விட்டார்.

அருக்காணிக்கு அவர் பேசியது வேதனையாக இருந்தது. பெரிய பங்களாவில் வசிக்கிற அந்த மனிதருக்கு, மனம் சிறுத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். ஆனால், அவரிடம் ஒன்றும் சொல்லாமல் பாத்திரம் கழுவி முடித்தாள்.

மகனை அழைத்துக் கொண்டு, அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

போகிற வழியில், அவள் கண்களைத் துடைத்துக் கொண்ட போது, தங்கராசு கேட்டான். அழறியாம்மா? இல்லடா… கண்ணுல தூசி

"நீ எதுக்கும்மா கவலைப்படறே… இதை பாத்தியா?" என்ற தங்கராசு, நூறு ரூபாய் தாள் ஒன்றை அவளிடம் காண்பித்தான். அருக்காணி திகைப்புடன், அந்த பணத்தை வாங்கிக் கொண்டே கேட்டாள். "இது எங்கடா கிடைச்சுது?"

அந்த வீட்டுல கீழே கிடந்தது. அந்த ஆளுக்கு தெரியாம, அதை எடுத்து ஜோபுல போட்டுகிட்டேன். அருக்காணி, அந்த இடத்திலேயே மகன் முதுகில் மாறி மாறி அடித்தாள்.

"இது என்னடா திருட்டுப் பழக்கம், எப்ப இருந்து ஆரம்பிச்சுது. அப்பன் புத்தி அப்படியே வந்திருச்சா உனக்கு, ஏழையா இருந்தாலும், கவுரவமா பொழைக்கணும்ன்னுதானடா, இவ்வளவு கஷ்டப் படறேன். என்ன காரியம் செய்திருக்கே."

அப்படியே திரும்பி, மகனை தர தரவென்று இழுத்து, அந்த வீட்டுக்குச் சென்றாள்.

இன்னமும் அந்த வீட்டுக்காரர், அந்த நண்பரிடம் பேசிக் கொண்டு தான் இருந்தார். அவளைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் கேட்டார்… "என்ன..?"

என் மகன் தெரியாத்தனமா தப்பு செய்திட்டான் எசமான். கீழே விழுந்து கிடந்ததாம், இந்த நூறு ரூபா. அதை எடுத்து வச்சுகிட்டான். அவள் அந்த நூறு ரூபாயை, அவரிடம் நீட்டினாள்.

அவர், தங்கராசுவை சுட்டெரிக்கிற மாதிரி பார்த்துக் கொண்டே, நூறு ரூபாய்த் தாளை வாங்கினார். "உன் புருஷன் பிக்பாக்கெட்டு, அதனால், வேலையில சேர்த்துக்க வேண்டாம்ன்னு, அன்னைக்கே பல பேரு சொன்னாங்க… இன்னைக்கு, உன் பையனும் அதையே செய்திருக்கிறான்."

வார்த்தைகள் சுட்டெரிக்க, துடித்துப் போனாள் அருக்காணி. அதுவும், முன்பின் தெரியாத ஒரு மனிதர் முன், இப்படி அவமானப்படுத்துகிறாரே என்று அழுகை அழுகையாக வந்தது.

"என்ன எசமான், குழந்தை ஏதோ தெரியாத்தனமா செய்ததை இப்படி சொல்றீங்க, அதான் அவனுக்குப் புத்தி சொல்லி, நான் திருப்பிக் குடுத்துட்டேனில்ல". அவர், தன் நண்பர் முன்னிலையில், அவள் அப்படிக் கேட்டதைக் கவுரவக் குறைவாக நினைத்தார்.

கோபத்துடன் சொன்னார். ”நீயா கொண்டு வந்து தந்திருக்கலைன்னா, உன் வீட்டுக்கு போலீஸ் வந்திருக்கும். திருட்டுத்தனம் செய்யலாமாம்; நான் அதை சொல்லக் கூடாதாம். இப்படிப்பட்ட ஆள் வேலைக்கு வேண்டாம். நாளையில் இருந்து நீ வேலைக்கு வராதே."

அருக்காணி கூனிக் குறுகிப் போனாள்!!

"என்ன மனிதர் இவர்? ஆனால், ஒரு வீடு இல்லையென்றால், வேலைக்கு ஆயிரம் வீடு" என்று எண்ணியவளாக சொன்னாள்.

"சரி எசமான்… நாளையில் இருந்து நான் வேலைக்கு வரலை. இந்த, 25 நாள் செய்த வேலைக்கு சம்பளம் கொடுத்திடுங்க, போயிடறேன்."

வேலைக்கு வரக்கூடாது என்று சொன்னதைக் கேட்டு, அவள் அதிர்ந்து போய், கெஞ்சிக் கூத்தாடுவாள் என்று நினைத்த அவருக்கு, அவள் அதை ஏற்று, செய்த வேலைக்கு சம்பளம் கேட்டது, அவர் கோபத்தை அதிகப்படுத்தியது.

"முதலில் என் வீட்டுல என்ன எல்லாம் காணாமல் போய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, கணக்கு போடாமல், உனக்கு நயா பைசா தர மாட்டேன்," என்றார்.

மனசாட்சி இல்லாமல் பேசும் அந்த மனிதரை, கண்கலங்கப் பார்த்தாள் அருக்காணி.

அவர், அவளை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தார்.

பக்கத்தில் இதை எல்லாம் பார்த்தபடி உட்கார்ந்திருந்த அவரது நண்பரை, நியாயம் கேட்கும் பாவனையில் பார்த்தாள் அருக்காணி. ஆனால், அவரோ, ஆழ்ந்த யோசனையுடன், வேறெங்கோ பார்த்தபடி இருந்தார்.

ஏழைக்கு யாரும் துணை இல்லை என்ற எண்ணம், அவள் மனதில் மேலோங்கி நின்றது. ஓரிரு நிமிடங்கள் நின்றவள், அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். திரும்பி வருகிற போது, அவள் மனமெல்லாம் ரணமாக இருந்தது. தங்கராசு அழவில்லை.

அவன் முகத்தை உர்ர்ரென்று வைத்திருந்தான்.

அவன், அவளை பார்த்த பார்வை, "நீ ஒரு முட்டாள்…" என்று குற்றம் சாட்டுவது போல தெரிந்தது.

அவளால் அதைத் தாங்க முடியவில்லை.

அவள் நேர்மைக்கு கிடைத்த மரியாதையைக் கண்டு, மகன் எள்ளி நகைப்பது போல் இருந்தது; மனம் வலித்தது. சிறிது தூரம் அவர்கள் போயிருப்பர்,

அவர்கள் அருகில் ஒரு கார் வந்து நின்றது. பயத்துடன் அருக்காணி பார்த்தாள்.

அந்த வீட்டுக்காரரின் நண்பர் காரில் இருந்து இறங்கினார்.

அவரை பார்க்கவே, அவளுக்கு அவமானமாக இருந்தது. தலை குனிந்து நின்றாள். அவர் ஒன்றும் சொல்லாமல், தன், விசிட்டிங் கார்டை நீட்டினார். "பக்கத்து ரோட்டில், புதிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒண்ணு வந்திருக்கில்லையா? அது என்னோடது தான்."

"அங்கே இந்த கார்டை கொண்டு போய், நாளைக்கு காலைல காண்பி. உனக்கு, நல்ல சம்பளத்துல, தகுந்த வேலை போட்டுக் கொடுப்பாங்க. நான் சொல்லி வைக்கிறேன்."

அவளால், தன் காதுகளை நம்ப முடியவில்லை.

அந்தக் கார்டை வாங்கியபடியே அவரைத் திகைப்புடன் பார்த்தாள்.

அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோர், மூன்று மாடிக் கட்டடம். ஐநூறு பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். அந்த வழியாகப் போகும் போதெல்லாம் அண்ணாந்து பார்த்திருக்கிறாள். அதிலெல்லாம் ஒரு வேலை கிடைக்கும் என்று, அவள் கனவிலும் நினைத்ததில்லை.

அவர், அவளைப் பார்த்துக் கனிவாகச் சொன்னார்…

நாணயமான ஆட்கள் வேலைக்கு கிடைக்கிறது, இந்த காலத்துல ரொம்ப கஷ்டம்மா. ஒரு நல்ல ஆளைக் கண்டுபிடிக்கறதுக்கு, பத்து பேரை வேலைக்கு சேர்க்க வேண்டியிருக்கு. பல ஊர்கள்ல தொழில் செய்ற என்னோட அனுபவம் இது.

பணத்தேவை இருக்கிறப்பவும், எடுத்தது மகன்னும் பார்க்காமல், அந்தப் பணத்தோட திரும்பி வந்தே பாரு உன்னை மாதிரி ஒரு நாணயமான வேலையாள் கிடைக்கணும்ன்னா, ஆயிரத்துல ஒருத்தர் தேர்றது கூட கஷ்டம். நாளைக்கு கண்டிப்பா வா," சொன்னவர்,

சட்டைப் பையில் இருந்து, ஒரு சில நூறு ரூபாய்களை எடுத்து, அவள் கையில் திணித்தார்.

"ஏதோ அவசரத் தேவைன்னு சொன்னியே… அதுக்கு வச்சுக்கோ."

எதிர்பார்க்காமலே, நல்ல வேலை கிடைத்த சந்தோஷத்தை விட, நேர்மைக்கு மதிப்பில்லை என்று, தன் மகன் நினைக்க இருந்த தருணத்தில், அவர், நாணயத்திற்கு உண்டான மதிப்பை உணர்த்தி விட்டுப் போனது, அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது…

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை…!

சமயோசிதம்

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது.

அப்போது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.

அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.

சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தைக் கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயிறு நிறைந்து விடும்" என்று கூறியது.

இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடிப் போனது.

இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது!

குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று

குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.

இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது. நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.

கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

புத்திமான்

Tuesday, December 14, 2021

காதல்

காலையில் எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் சேகர்.

அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்.

ஆனால், தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாகவே புறப்பட்டான்.

இதை பார்த்த மனைவி "ஏன் இவ்வளவு சீக்கிரமா போகிறீர்கள்?" என்று வினவினாள்.

அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி கொண்டே கிளம்பினான்.

"நேற்றே சொல்லி இருந்தால் இன்னும் விரைவாக சமைத்து இருப்பேனே, கொஞ்சம் பொறுங்கள் சமையல் முடிய போகிறது" என்றாள் மனைவி.

"எல்லாம் உன்னிடம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா..? எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது. ஒரு நாள் சாப்பிடாமல் போனால் ஒன்றும் செத்து விட மாட்டேன், போய் நீ நன்றாக சாப்பிடு..!"

என்று சொல்லி விட்டு விருட்டென்று வாகனத்தை எடுத்து சென்றான்…

மனைவி ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று, சமையலை முடித்து இறக்கி வைத்து விட்டு தானும் சாப்பிடாமல் துணிகளை துவைக்க சென்று விட்டாள்…!

"சேகர்" ஒரு தபால் அலுவலகத்தில் வேலை செய்கிறான்.

அவனுடைய மனைவி வீட்டில் தான் இருக்கிறாள்.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்…

வீட்டில் பெற்றோர்கள் சம்மதம் கிடைக்க வில்லை,

அதனால் பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு, தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து வாங்கிக் கொண்டு தனியாக வந்து விட்டான்..!

இருவருக்கும் திருமண ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை,

இது பெரிய மன உளைச்சல் ஆகவே இருந்தது "சேகருக்கு"

அலுவலகம் முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தான் சேகர்

அலுவலகத்தில் சில வேலைகளை தவறாக செய்ததால் மேலதிகாரி சேகரை எல்லோர் முன்னும் ரொம்ப திட்டி விட்டார்..!

அதை நினைத்த படியே வீடு வந்து சேர்ந்தான்…

மனைவி ஆவலோடு தான் சமைத்த உணவை எடுத்து வந்து பரிமாற துவங்கினாள்.

இவனும் சாப்பிட உட்கார்ந்தான்..

சாப்பிட ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தட்டை எடுத்து தூக்கி சுவர் மீது அடித்தான்..!

அவள் அப்படியே உறைந்து போய் நின்றாள்..!

"உணவில் காரம் எவ்வளவு போட்டு இருக்கிறாய், உனக்கு சமைக்க தெரியாதா?" என்று கத்தி பேச தொடங்கினான்.

உணவு அவ்வளவா காரம் இல்லை. ஆனால், அவன் அலுவலகத்தில் நடந்ததை நினைத்து கொண்டே சாப்பிடவும்தான் அது அவ்வளவு காரம் ஆகிவிட்டது.

"உன்னால் ஒரு காரியம் ஒழுங்கா செய்ய முடியாததெல்லாம் என் விதி. உன்னோடு வாழ வேண்டும் என்பதற்காக என் உறவுகளை எல்லாம் தூக்கி எறிந்தேன்! உன்னால் ஒரு குழந்தை பெற்று எடுக்கும் பாக்கியம் கூட இல்லை, உன்னை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து இருக்கலாம், என் பெற்றோர் பேச்சை அப்பொழுதே கேட்டு இருக்கலாம்.

உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி இருளாக மாறி விட்டது, அலுவலகத்திலும் இவ்வளவு ஆண்டு வேலை செய்து உனக்கு தானே கொட்டுகிறேன், என்ன பண்ணுவது?

காதலித்து விட்டேன் அல்லவா..! இன்னும் நிறைய சம்பாதித்து கொட்டுகிறேன். நன்றாக கொட்டிக்கொள்" என அடிக்கிக் கொண்டே போனான். அறை கதவை வேகமாக மூடி விட்டு உள்ளே சென்று விட்டான்…!

மனைவி கண் கலங்கிய படி 'தானும் எல்லோரையும் விட்டு தானே வந்தேன்' என மனதில் நினைத்து கொண்டே கண்ணீர் தரையில் விழுந்த படி வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்..!

மனைவியும் சாப்பிடாமல், அப்படியே தரையில் படுத்து உறங்கி விட்டாள்..!

மறுநாள் காலையில் எழுந்து மறுபடி அவளது பணியை செய்ய ஆரம்பித்தாள்.

சேகர் எதுவும் பேசாமல் செய்து வைத்த சாப்பாட்டையும் எடுத்துக் கொள்ளாமல் விருட்டென்று கிளம்பி போய் விட்டான்..!

அலுவலகம் சேர்ந்த பிறகு தனது பணியை ஆரம்பித்தான்…

அப்பொழுது ஒரு வயதான முதியவர் தலையில் ஒரு பழ கூடையைச் சுமந்த படி, வியர்வை சொட்ட, சொட்ட வந்தார் (மதிய நேரம் உச்சி வெயில் வேறு), பழ கூடையை இறக்கி வைத்து விட்டு, அலுவலகத்தின் உள்ளே வந்தார்…!

தனது சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்து மேசையில் வைத்தார் (பணம் அவரது வேர்வையில் நனைந்து இருந்தது)…

இதை கண்ட சேகருக்கு ஒரே ஆச்சரியம்..!

இவ்வளவு வயதான காலத்தில் யாருக்காக இப்படி உழைக்கிறார் என்று..?

அதை மனதில் நினைத்துக் கொண்டே "உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் ஐயா?"

என்று அவரிடம் வினவினான்…

அந்த முதியவர் கடந்த மாதம் பணம் அனுப்பிய ரசீதை காண்பித்து,

"இதே முகவரிக்கு பணம் அனுப்ப வேண்டும்" என்று சொல்லிவிட்டு, அதோடு ஒரு கடிதத்தையும் கொடுத்தார்…

அந்த ரசீதை கண்ட சேகருக்கு ஒரே அதிர்ச்சி…!

(அது ஒரு முதியோர் இல்லத்தின் முகவரி)

சேகருக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது..!

'இது எதற்காக, ஏன் அனுப்புகிறீர்கள்?' என்று கேட்க வேண்டும் என்கிற ஆவல் அவனை பிடித்து கொண்டது…

தயங்கிய படியே,

"ஐயா இதை கேட்க கூடாதுதான் இருந்தாலும் என் மனம் கேட்க வேண்டும் என்று துடிக்கிறது, உங்களிடம் ஒன்று கேட்கலாமா..?" என்று குரல் தாழ்த்திய
படி கேட்டான்…

அவரும் "சொல்லுங்கள் தம்பி" என்றார்.

"நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்கள்..! எதற்க்காக…! உங்கள் மனைவிக்காகவா…?" என்றான்…

அந்த முதியவர் ஆச்சரியமாக சேகரை பார்த்தார்..!

சேகருக்கு ஒன்றுமே புரியவில்லை,

'தவறாக கேட்டு விட்டோமோ..?' என்று நெஞ்சம் படபடத்தது..!

"நான் இருக்கும் போது என் மனைவியை அப்படி விட்டு விடுவேனா.. தம்பி?" என்று சற்று கம்பீரமாக அந்த முதியவர் சொன்னார்.

சேகர் அமைதியாக அவர் சொல்வதை கேட்க ஆரம்பித்தான்…

முதியவர் சொல்ல ஆரம்பித்தார்…

"நான் இந்த முதியோர் இல்லத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக பணம் அனுப்புகிறேன், இன்று வரை யாரும் இந்த கேள்வியை கேட்டதில்லை. முதல் முறையாக நீங்கள் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!"

என்று சற்று உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தார்…

"எனக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகின்றன, என் மனைவி என் கூட தான் இருக்கிறாள், எங்களுக்கு குழந்தைகள் இல்லை. என் மனைவிக்கு வாய் பேச முடியாது!!

எங்கள் திருமணம் ஒரு சுவாரசியமான நிகழ்வு தம்பி" என்று கூறியவர்

கொஞ்சம் தண்ணீர் கேட்டார் சேகரிடம்…

மிக விரைவாக ஓடி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் சேகர்…

சேகர் நாற்காலியின் நுனியில் அமர்த்த படி, "உங்களின் திருமணம் எப்படி நடந்தது? உங்கள் மனைவியை எப்படி தெரியும்? அதையும் சொல்லுங்கள் ஐயா..! எனக்கு ஆவலாக இருக்கிறது" என்று முதியவர் தண்ணீர் குடித்து முடிப்பதற்குள் சொல்லி முடித்தான்…

முதியவர் சற்று சிரித்த படி மேலே சிந்திய நீரை துண்டினால் துடைத்த படி மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்..!

"என் மனைவியை சிறு வயதிலேயே தெரியும்,

எங்கள் வீட்டின் அருகில் தான் குடும்பமாய் இருந்தார்கள்,

அவர் வீட்டில் இவள் ஒரே பிள்ளைதான், அவளுக்கு 10 வயதாக இருந்த பொழுது அவளுடைய தந்தையோடு வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் வாகனம் மோதி அவர் தந்தை இறந்து விட்டார்!!

தன் கண் முன்னே தந்தை இறந்து போனதை கண்ட அவளுக்கு பேச்சு வராமல் போய் விட்டது…

அதன் பிறகு அவளுடைய தாய் பல வீட்டு வேலைகளை செய்து அவளை வளர்த்தார்,

இவளும் வளர்ந்து பெரியவளாகி விட்டாள்… அவளுடைய குறையை பார்த்த யாருக்கும் அவளின் அன்பு தெரியவில்லை…

அவளுக்கு எல்லோரும் தன்னிடம் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும் ஆனால் யாரும் பேசதான் மாட்டார்கள்..!

அவளின் தந்தையின் மரணத்திற்கு பிறகு உறவுகள் எல்லாம் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர்… திருமண வயது வந்தது, ஆனால் பேச முடியாத காரணத்தால் அவளை திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை…

பிறகு எங்கள் பெற்றோர்கள் பேசி இருவருக்கும் திருமணம் நடந்தது…

பிறகு காலங்கள் கடந்தது.

எங்களை பெற்றவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள்..!

எங்களுக்கும் வயது ஆகி விட்டது.

ஆனால், என் மனைவி ஒரு குழந்தை மாதிரி தம்பி!" என்று சொன்னவர் குரலில் ஒரு தடுமாற்றம்…

(கையில் வைத்து இருந்த துண்டை எடுத்து கண்களை லேசாக துடைத்தார்)

(சேகரின் உள்ளத்தில் ஏதோ ஒன்று குத்த ஆரம்பித்தது)

தன்னை நிதானித்து கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்..

"அவளுக்கு உலகமே நான் மட்டும் தான், என்னை தவிர வேறு யாரையும் தெரியாது…

ஒரு முறை நான் உடல் நலம் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையாக இருந்தேன்..

வேலைக்கு செல்லாமல் கையில் பணம் வேறு இல்லை.

அப்பொழுது மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக, அவள் அம்மா நினைவாக வைத்து இருந்த ஒரு தங்க குண்டு மணியை எனக்காக கடையில் விற்று விட்டாள்!!

பிறகு அந்த பணத்தை கொண்டு மருத்துவரிடம் சென்று, 'என் கணவனை எப்படியாவது காப்பாற்றுங்கள்' என்று வாய் பேச முடியாத நிலையிலும், செய்கையாக காண்பித்து மருத்துவரிடம் கெஞ்சி புழுவாக துடித்து போய் விட்டாள்..!

என்று சொன்னவர் கண்கள் இரண்டும் சிவந்து போய் விட்டது

பிறகு நான் குணமாகி என் வேலையை செய்ய ஆரம்பித்தேன்"

என்று தன்னை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்…

"அப்பொழுது தான் எனக்கு ஒரு சிந்தனை வந்தது…

ஒருவேளை, எனக்கு முன்பு அவள் இறந்து விட்டால் பரவாயில்லை;

கடைசி வரை அவளை பார்த்து கொண்ட மன நிறைவு இருக்கும்…

ஆனால், அவளுக்கு முன்பே எனக்கு இறப்பு வந்தால், என் மனைவியின் நிலை என்னாகும் என்று..?

அதற்குதான் இந்த பணம்…

ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை அனுப்பி விடுவேன்..

அதில் பாதி அந்த முதியோர் இல்லத்தில் கணவன் இல்லாமல் இருக்கும் மற்றவர்களுக்கும், மீதி பாதி தொகையை என் மனைவிக்காக சேர்த்து வைத்து கொண்டு வருகிறேன்..!

அந்த பணத்தோடு ஒரு கடிதம் கொடுத்தேன் அல்லவா..! அதை திறந்து படித்து பாருங்கள் தம்பி…" என்றார்.

சேகர் நெஞ்சில் ஒரு உறுத்தல்… கைகள் நடுங்கிய படி கடிதத்தை பிரித்து பார்த்தான்…!

அவன் கண்கள் இரண்டும் கலங்கிய படி இருந்தது..!

அதில்,

"நானும், என் மனைவியும் நலமாக உள்ளோம்… இந்த மாதம் என்னால் இயன்ற தொகை அனுப்பி உள்ளேன். அடுத்த மாதம் இதே போல் கடிதமும், பணமும் வரவில்லை என்றால்.. நான் இறந்து போய் இருப்பேன்… நீங்கள் வந்து என் மனைவியை அழைத்து சென்று பத்திரமாக குழந்தை போல் கடைசி வரை பார்த்துக் கொள்ளுங்கள்… இதுவே என் கடைசி ஆசை.."

இதை படித்த சேகருக்கு நெஞ்சில் பாரம் கூடியது கை, கால் நடுங்க ஆரம்பித்தது..

கலங்கிய கண்களோடு அந்த முதியவரை பார்த்தான்…

"சரி தம்பி, எனக்கு நேரம் ஆகி விட்டது; அதை அனுப்பி விடுங்கள்… ஒரு உதவி செய்ய வேண்டும்" என்றார் அந்த முதியவர்.

"என்ன செய்ய வேண்டும் ஐயா?"

என ஆவலோடு கேட்டான்.

"வெளியில் நான் வியாபாரம் செய்யும் பழக்கூடை இருக்கிறது, அந்த பழக்கூடையை கொஞ்சம் தூக்கி விட முடியுமா?" என்றார்.

நெஞ்சில் ஒரு பெரிய பாரத்தோடு அவன் அமர்ந்து இருந்த அலுவலக கூண்டை விட்டு வெளியே வந்தான்..

வெளியே வந்து பார்த்த சேகருக்கு பெரிய அதிர்ச்சி….!

அந்த முதியவருக்கு இடது கை இல்லை…!

இவ்வளவு நேரம் அவருக்கு கை இல்லாததை சேகர் கவனிக்கவே இல்லை..

அவ்வளவு ஆர்வமாக அவர் சொன்னதை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தான்

கண்கள் கலங்கிய படி அந்த கூடையை தூக்கி அவர் தலையின் மீது வைத்தான்…

அது கொஞ்சம் சுமை அதிகமாகவே இருந்தது.

"மனைவி மீது இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்கள்..

உங்களுக்கு ஒரு குழந்தையும், கொஞ்சம் சொத்தும் இருந்து இருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும்?

நீங்கள் உங்கள் மனைவிக்காக இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லையே!!" என்று குரலில் ஒரு நடக்கத்தோடு சொன்னான்…

இதை கேட்ட முதியவர் சற்று சத்தமாய் சிரித்தார்…

"ஆ…ஆ…ஆ… என் மனைவி நம்பி வந்தது என்னைத்தான்…! சொத்தையோ அல்லது பிள்ளையையோ அல்ல, அவளுக்காக சுமக்கின்ற இந்த சுமையும் ஒரு சுகமே…!"

என்று சொல்லிக் கொண்டே உச்சி வெயிலில் உற்சாகமாக பழக்கூடையை தலையில் வைத்த படி ஒரு கையால் பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தார் அந்த முதியவர்…

சேகரின் கண்களில் கலங்கி நின்ற நீர்….! பெருந்துளியாய்…!

தரையில் விழுந்தது…!

தரையில் விழுந்தது கண்ணீர் துளி மட்டும் அல்ல…!

அவனின் சுபாவமும்…!

வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்
உலகின் ஆக சிறந்த காதல் ஜோடிகள்…
கொண்டு செல்ல ஒன்றும் இல்லை இவ்வுலகில் கொடுத்து செல்வோம்
உண்மையான அன்பை

எலிப்பொறி

சின்ன கதை தான் படிங்க.. சுவாரஸ்யமா இருக்கும்.

ஒரு பண்ணயார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது. ஒரு நாள் தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.

எலி வளையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.

வீட்டின் எஜமானனும், எஜமானியும், ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏதோ நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது…

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது…

"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது" என்றது..

இதைக் கேட்ட கோழி உடனே பதில் சொன்னது.. "உன்னைப் பொறுத்தவரை இது கவலைப்பட வேண்டிய விஷயம்தான். நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை" என்றது கோழி..

உடனே அது, பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் சென்று.. அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது.

வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு, "நான் எலிப் பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்…" என்றது.

மனம் நொந்த எலி… அடுத்தாக…
பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது…

ஆடும் அதேபதிலைச் சொல்லியது.

அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை…

"எலிப் பொறியை பார்த்து, என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு, எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு…

பண்ணையாரும், அவர் மனைவியும், தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில், "டமால் " என்றொரு சத்தம்.

எலிதான் மாட்டிக் கொண்டு விட்டது என்று என்னிய பண்ணையார் மனைவி ஓடிவந்து..
எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

ஆனால்… எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும்..
பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி…

"பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு.."
சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது.." என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை.

கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.

உறவினர்கள் சிலர் நலன் விசாரிக்க வந்தார்கள்…

அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்…

வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.

பண்ணையார் தன் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை…

விருந்தாக ஆடும் உயிரை விட்டது..

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

"எலி தப்பித்து விட்டது. அப்பாடா என்றது"

நீதி: அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் காது கொடுத்தாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை, நம்முடையதாகவும் இருக்கலாம்!!

பி.கு: மாரிதாஸ் அவர்களின் கைதுக்கும் இந்த கதைக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நான் பொறுப்பல்ல!!

கர்மவீரர்

 அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார்.

கர்மவீரர் காமராஜர்

ஒருமுறை "ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு" என்று 100₹-யை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார். ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி.

பார்த்ததும் "ஏன்யா, நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா" என்று எகிறினார் மூக்கையா தேவர்.

மண்ணாங்கட்டிக்கு கோபம். "என்னங்கய்யா நீங்க. இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா" என்று பதிலுக்கு சத்தம் போட்டார்.

அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துக் காட்டச் சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். "அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்" என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம்.

இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். மூக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார். என்னவென்று கேட்கிறார். "இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா" என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று "முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்" என்றார்.

அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்கவேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள். மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரை பார்க்கிறார்.

அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள் தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. "எழுதப் படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக் கூடாதான்னு கேளுடா" என்கிறார். மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் "ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்க கூடாதான்னு" தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி.

பிறகு பேச்சில்லை. அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போது தான் நாம் பேசியிருப்பது முதல்வர் காமராசர் என புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி "ஐயா நீங்களும் வாங்க" என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார்.

கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது. முதல்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.

நீங்கதான் மண்ணாங்கட்டியா என்கிறார். ஆமாங்க ஐயா.நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா… வாண்ணே. வந்து பக்கதில உட்காருங்க என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக் கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு "நான் தப்புபண்ணிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே… ரெண்டு நாளா உங்கவீட்ல சோறு தண்ணியில்லியாமே. சமைக்கலயாமே… உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க… எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.. எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக் கூடாது. இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறு தான் என்று தட்டிக் கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார்.

காமராஜருக்கும் பேச்சு இல்லை அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து "இவரை அழைத்துக் கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தைங்ககிட்ட சொல்லுங்க" ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி "போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்" என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பி வைத்தார். ஒரு ஏழையின் கண்ணீர் வலி.. இன்னொரு ஏழைக்குத் தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழை மக்களுக்காகவே இருந்தார்.

இன்று இப்படி முதல்வரிடம் பேச முடியுமா? பேசினால் கைது குண்டாஸ் சட்டம் போடுவார்கள். அவர் கால் செருப்புக்கு ஈடாவார்களா இவர்கள்.

வாக்குறுதி

 அமெரிக்காவில் கடும் பனி இரவில், தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை அவதானித்தார் ஒரு செல்வந்தர் ..

முதியவருக்கு அருகில் வந்து கேட்டார்

"வெளியே அதிகமாக குளிருகிறதே, உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா?
உங்களுக்கு குளிர் இல்லையா?" என்று

முதியவர் பதிலளித்தார்...

"எனக்கு சூடான உடைகள் இல்லை, ஆனால்.. நான் இப்போது அதற்கு பழக்கப்படுகிறேன்" என்று சொன்னார்

கோடீஸ்வரன் பதிலளிக்கிறார்…

"நான் வரும் மட்டும் காத்திருங்கள்.. நான் உங்களுக்கு ஆடை தருகிறேன்" என்று

அந்த ஏழை மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், அவர் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.. அந்த பணக்கார மனிதன், தன் வேலையால் ஏழை மனிதனை மறந்து விட்டான்...

காலையில் அவர் அந்த ஏழை மனிதனை நினைவு கொண்டார்.
அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்று பார்த்தார்
ஆனால், அந்த முதியவர் குளிரால் இறந்து விட்டார்

அந்த மனிதன் கையில் இப்படி எழுதப்பட்டு இருந்தது…

"எனக்கு சூடான உடைகள் இல்லாத போது,
நான் குளிருடன் போராட முடிந்தது..
ஆனால் ..
நீங்கள் எனக்கு உதவ வாக்குறுதி அளிக்கும் போது, நான் உங்கள் வாக்குறுதிக்கு அடிமையாகி, நான் குளிருக்கு எதிராக போராடும் இருக்கும் திறனை இழந்து விட்டேன்." என்று

எனவே.. வாக்குறுதி அளிக்கும் முன்னும், பொய்யான வாக்குறுதிகளை உருவாக்கும் முன்னும் யோசியுங்கள்…

அது ஒருவரின் மரணத்திற்கு கூட காரணமாக இருக்கலாம்.

Monday, November 29, 2021

குட்டிக் கதை

குரு ஒருவர் தன் மூன்று சீடர்களையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றார். ஒரே மாதிரியான மூன்று பாறைகளைக் காட்டி, அவற்றை ஏதாவது ஒரு வகையில் இல்லாமல் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

முதல் சீடன் உடனே ஒரு மண்வெட்டியை எடுத்து பக்கத்தில் ஒரு பெரும் பள்ளம் வெட்டி, அதனுள் அந்தப் பாறையைத் தள்ளி, அதன்மேல் மண்ணைப் போட்டு மூடினான்.

இரண்டாம் சீடன் ஒரு சுத்தியலை எடுத்து, பாறையைத் தூள் தூளாக நொறுக்கினான்.

மூன்றாவது சீடன் ஓர் உளியை எடுத்து, பாறையில் ஓர் அழகான சிற்பம் வடித்தான்.

ஆக மூன்று பேரும் அந்தப் பாறையை இல்லாமல் செய்துவிட்டனர். முதல் சீடன் செய்தது மறைத்தல். இரண்டாமவன் செய்தது அழித்தல். மூன்றாம் சீடன் செய்தது ஆக்கல். ஆக, மூன்றாம் சீடனின் செய்கையே சிறந்தது எனப் பாராட்டிய குருநாதர், மேலும் ஓர் உபதேசமும் அதில் அடங்கி இருப்பதாகக் கூறினார்.

"அதாவது, அவன் அந்த சிற்பத்தை உருவாக்கும் பொழுது, புதிதாக சிற்பத்தை எங்கிருந்தோ உருவாக்கவில்லை. அந்தப் பாறையிலிருந்து தேவையற்ற பகுதியை நீக்கினான், அவ்வளவுதான். அதேபோல் நம்மிடம் இருக்கும் தேவையற்ற குணங்களை நீக்கிவிட்டோமானால், நம்மில் ஒரு சிறந்த மனிதனைக் காணலாம்" எனக் கூறினார்.

(அ)சைவம்

அசைவம் சாப்பிடலாமா? இறை நம்பிக்கை உள்ளவர்கள்? அசைவம் சாப்பிடலாமா கூடாதா?

இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது.

இதோ ஓஷோ அவர்களின் பதில்.

  • உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
  • உணவுக்கும் கடவுள் கோபிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
  • உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
  • உணவுக்கும் உடலுக்கும் சம்பந்தம் உண்டு.
  • உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.
  • உணவுக்கும் குணத்திற்கும் சம்பந்தம் உண்டு.
  • உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும் சம்பந்தம் உண்டு.
  • உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும் சம்பந்தம் உண்டு.
  • உணவுக்கும் மனித மனதிற்கும் சம்பந்தம் உண்டு.
  • மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்பந்தம் உண்டு.

1. கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன் அதைக் கரைக்கவே மனித பிறவி.

2. தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவிகள் குறைவு மாமிச உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள் அதிகம்.

3. எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்.

4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத குஞ்சுகள் மற்றும் குட்டிகள் தாயின் மனம் மற்றும் அந்த குட்டியின் மனம் எவ்வாறு தேடி தவித்து இருக்கும்? அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணர வேண்டியது இதுதான். அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்.

5. அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான் அந்த கர்மாவையும் சேர்த்து கரைக்க ஒருவன் தைரியமாக முன் வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம் இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை?
ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார் மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார் இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை கடன் வாங்கியவனே
கடனை கட்ட வேண்டும்.

6. சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால்.

7. காட்டில் கூட ஆடு, மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை. புலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகம் என்று அழைக்கிறோம். ஆக, சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை.

8. உடலால் மனித பிறவி சைவம். உயிரால் மனித பிறவி சைவம். குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.

9. ஆடு, மாடு, மான், யானை போன்றவை உடலால் சைவம் உயிரால் சைவம் மனதாலும் சைவம்.

ஆகவே, மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே மனிதனின் தர்மமாகிறது என்பதால் அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.

இது ஓஷோ அவர்களின் விளக்கம். 

குந்தவை நாச்சியார் இஸ்லாத்து மாறினாரா?

இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார் பொ. ஆ 980 ல் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் வெகு காலமாக உருட்டப்படுகிறது. இதற்கு ஆதாரமாக பேராசிரியர் அகத்தியதாசன் எழுதிய குந்தவை நாச்சியார் எனும் நூலை மேற்கோள் காட்டி இது போன்ற வரலாற்றுத் திரிபுகள் வலம் வருகின்றன.

நாம் அடுத்த மதத்தவர்களின் நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்காத போதே மதவாதி என்ற பட்டத்தை சூட்டும் சில தமிழறிஞர்கள் இதற்கெல்லாம் மறுப்பு பதிவு எழுதினால் நேரடியாக மதவாதியாக மாற்றி விடுவர் என்ற ஐயம் இருந்தாலும் இதற்கு எதாவது ஒரு வகையில் மறுப்பு எழுத வேண்டும் என்று நண்பர்கள் பலர் வலியுறித்தியதன் விளைவாக இப்பதிவு..!

முதலில் இது பற்றிய தகவல்கள் கிடைக்கும் நூல் அகத்தியதாசன் அவர்கள் எழுதிய ஒரு ஆய்வு நூலாகும். இந்நூலில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை சுருக்கமாக பார்த்துவிட்டு இதற்கு மறுப்பு எழுதுவோம்.

1. இராஜராஜ சோழன் பொ.ஆ 962 ல் பிறந்தார்.

2. குந்தவை நாச்சியார் பொ.ஆ 953ஆம் ஆண்டு பிறந்தார்.

3. குந்தவை நாச்சியார் பொ.ஆ 1026 ல் இயற்கை எய்தினார்.

4. இந்த தரவுகளுக்கு ஆதாரங்கள் அரேபியாவில் இருந்து வந்ததாம்.

5. வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின்தான் பரவியது அரச குடும்பத்தினரை கொலை செய்வதன் மூலமும் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதன் மூலமும் வைணவம் பரப்பப்பட்டதால் தனது தன்மானத்தை காக்க குந்தவை நாச்சியார் மதம் மாறினார்.

7. தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை நாச்சியார் தனக்கு தானே திருமேனி ஒன்று எடுத்தார்.

இப்படியாக ஏகப்பட்ட தகவல்கள் எந்தவிதமான ஆதாரமும் இன்றி கொட்டி கிடக்கின்றன அந்நூலில். இதற்கெல்லாம் ஆதாரம் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு அரேபியாவில் உள்ளது என்று எளிதாக கடந்து சென்றுள்ளார் ஆசிரியர்.

சரி இவற்றிற்கு நாம் பதில் சொல்வதானால் சில வரலாற்று ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன் அவர்களிடம் வினவியபோது ஒருசில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன…!

இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 962 என்பதே தவறான தகவல் எனவும், இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 947 என்பதே பெருவாரியான தொல்லியல் ஆய்வாளர்களின் முடிவு என்பது அந்நூலின் கூற்றுகளுக்கு பெருத்த அடியாகும்.

குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி என்பதால் தோராயமாக பொ.ஆ 945 ல்தான் குந்தவை நாச்சியார் பிறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் குந்தவை நாச்சியாரை மதமாற்றம் செய்தவர்கள் பொ.ஆ 953 வரை எடுத்துச்செல்வது விந்தையிலும் விந்தை…!

பொ.ஆ 1004 வரை தான் குந்தவை நாச்சியார் வைதீக முறையை பின்பற்றி வந்தார் எனவும், அதுவும் 9 வயதில் பாபா நந்தர் எனும் இஸ்லாமிய போதனையாளரை சந்தித்ததில் இருந்து வைதீக முறைகளில் நாட்டமில்லாமல் தான் இருந்தார் எனவும் எழுதிய ஆசிரியர் பொ.ஆ 1004 க்கு பின் இஸ்லாம் மதத்தை நேரடியாக தழுவினார் என்று எழுதுகிறார்.

இங்கே மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எழுகிறது. அது என்ன?

பொ.ஆ 1004 ல் இஸ்லாம் மதத்தை ஏற்ற குந்தவை நாச்சியார் 14 ஆண்டுகள் கழித்து எப்படி பழயாறை அரண்மனையில் தங்கி அரசு பணிகள் மேற்கொண்டார்?அதாவது பொ.ஆ 1018 ல் குந்தவை நாச்சியார், பழயாறை அரண்மனையில் தங்கி அரசுப் பணிகள் மேற்கொண்டார் என்றும் கோவிலுக்கு நிவந்தமும் அளித்தார் என்பதும் கல்வெட்டு கூறும் செய்தி. அதாவது தனது 73 வயதிலும் ( 1018 - 945) கோவில் பணிகள் ஆற்றுகிறார்.

இக்காலம் இன்னும் கூட அதிகமாகலாம். ஆக குந்தவை நாச்சியார் தனது இறுதிக் காலம் வரை கோவில் பணிகளை மேற்கொண்டவர் தனது மதத்தை விட்டு இஸ்லாம் மதம் மாறினார் என்பது மதவெறியின் உச்சமே!

வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் தான் பரவியது என்று கூறும் ஆசிரியர் வைணவ மத மாற்றத்திற்கு அஞ்சியே குந்தவை நாச்சியார் மதமாறியதாக தனது பிராமண வெறுப்பை வைதீக பிராமணர்கள் மீது காட்டியுள்ளார்.

ஒருவேளை 12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில் தான் வைணவம் வளர்ந்தது என்றால் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் வைணவர்களுக்கென தனியாக சித்தாந்தங்களை வகுத்தார்?

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்குஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே

-திருமந்திரம்.

12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில்தான் வைணவம் வளர்ந்தது என்றால் ஐந்தாம் நூற்றாண்டில் வைணவம் என்றொரு சமயம் இருந்ததைத் திருமூலர் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இது கொடு மணல் அகழாய்வில் வெளிப்பட்ட பானையோடுகளில் பழந்தமிழ் எழுத்தான தமிழியில் காணப்படும் பெயர்களில் ஒன்றுதான்,

"கண்ணன் ஆதன்"

இது திருமால் வழிபாட்டின் எச்சமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை தொல்காப்பியத்தின் மாயோன் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டு அறியலாம். இதன் அடிப்படையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கண்ணன் எனும் திருமால் வழிபாட்டை கொண்டுள்ளோம் என்பதில் ஐயமேதும் இருக்க இயலாது.

அதுபோல சங்க இலக்கியங்களில் பெருமளவில் புகழப்படும் தெய்வம் திருமால்தான் என்பதை அந்நூலின் ஆசிரியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் வைணவம் வளர்ந்தது என்பதுபோன்ற கற்பனைக் கதைகளை எழுதியுள்ளார்…!

அடுத்ததாக தஞ்சை பெரிய கோவிலில் தனக்குத்தானே திருமேனி ஒன்றை குந்தவை நாச்சியார் எடுத்ததாக அந்நூலில் பதிவு செய்துள்ள ஆசிரியர், தன் தந்தைக்கும், தாய்க்கும் செப்புத் திருமேனிகள் எடுத்துள்ளார் என்பதைத் தான் "தம்மை" என்ற சொல்லால் குறிக்கப்பட்ட கல்வெட்டு குறிப்பிடுகிறதே அன்றி "தம்மை" என்றால் தனக்குத்தானே என்று பொருள் அல்ல.

இதை "தம் அம்மை" அதாவது தனது தாய் என்றே பொருள் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல வரலாற்றுத் திரிபுகள் தான் அந்நூலில் இடம் பெற்றுள்ளதே அன்றி குந்தவை நாச்சியார் மதம் மாறினார் என்பதற்கு யாதொரு சான்றுகளும் இல்லை!

-பா இந்துவன்

படித்ததில் பிடித்தது!!

Wednesday, November 24, 2021

குரு தேஜ் பகதூர்

சீக்கியர்களின் குரு பரம்பரையின் ஒன்பதாவது குருவான குருதேஜ் பகதூரின் பலிதான தினம் இன்று (24.11.1675)

தர்மத்தின் வழி நிற்பதா? இல்லை.. மரணத்தைத் தழுவுவதா? என்ற கேள்வி எழுந்த போது, அழியும் உடலுக்காக அழியாத தர்மத்தை விடக்கூடாது என்று செயலில் காட்டியவர் குரு தேஜ்பகதூர்.

சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் அவர்களின் மகனாக 1621ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ம் நாள் அமிர்தசரஸ் நகரில் பிறந்தார். இயற்பெயர் தியாகாமால். தேஜ் பகதூர் என்ற பெயருக்கு வாள் சண்டையில் விற்பன்னர் என்று பொருள். அமிர்தசரஸ் நகரம் சீக்கிய குருமார்களின் இருப்பிடமாக இருந்தது.

சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாக குரு தேஜ்பகதூர் 1664 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

பெரும் வீரர், சிறந்த கவிஞர் மற்றும்  தத்துவ ஞானி. இவரது முயற்சியால் பல இடங்களில் குடிநீர் குளங்களும், லங்கர் எனப்படும் இலவச உணவு வழங்கும் நிலையங்களும் அமைக்கப்பட்டது. அனந்தபூர் சாஹிப் நகரத்தை உருவாக்கினார். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த  சாஹிப்பில் இவர்  இயற்றிய எழுநூற்று எண்பதுக்கும் மேலான பிரார்த்தனை பாடல்கள் உள்ளது.

ஹிந்து தர்மத்தை காப்பதற்காக சீக்கிய குருமார்கள் போராடினர். ஆலயங்களை அழிப்பதும், பசுக்களை கொல்வதும், உருவ வழிபாட்டை  தடை செய்வதும், மக்களை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மாற்றுவதும் என முகலாயர்கள் ஈடுபட்டு வந்தனர்.

ஔவுரங்கசீப் காலத்தில் காஷ்மீர் பண்டிதர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதமாற அரசு நெருக்கடி கொடுத்தது. குரு தேஜ் பகதூரிடம் காஷ்மீர்  பண்டிதர்கள் அடைக்கலம் நாடினர்.

'நானும் இஸ்லாம் மதத்திற்கு மாறினால் தான், அந்த பிராமணர்களும்
மாறுவார்கள்', என்று ஒளரங்கசீப்புக்குத் தகவல் அனுப்பினார் பகதூர். அதனால் முகலாயப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஒன்று இஸ்லாமியராக மாற வேண்டும் அல்லது மரணம். தர்மத்தை கைவிடுவதைக் காட்டிலும் உயிரை விடுவது மேல் என்று பதிலளிக்க,  பகதூரின்  தலையை வெட்டி கொலை செய்தனர் முகலாயர்கள்.

குரு தேஜ் பகதூரின் மகனும், சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்தசிம்மன் போராட்ட குணமுடையவர்களாக சீக்கியர்களை உருவாக்கினார். குரு தேஜ் பகதூரின் பலிதானத்தைத் தொடர்ந்து பல காஷ்மீர் பண்டிதர்கள் சீக்கியர்களாக மாறி, இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடினர்.

வெறும் உபதேசங்களால் அல்லாது உதாரணத்தால் வாழ்ந்து காட்டிய குருவின் வாழ்வும், பலிதானமும் நம்மை வழிநடத்தட்டும்.