Monday, July 20, 2020

மகாபாரதம் பகுதி 21

பீஷ்மர் செய்த பாவம்

பீஷ்ம - பரசுராம யுத்தம்


    இப்படியே இருபத்தி மூன்று நாட்கள் அந்த யுத்தம் குருக்ஷேத்திரத்தில் இவ்விருவருக்கும் இடையில் நடந்தது. இவ்வாறு, எதிர் காலத்தில் நடக்க விருக்கும் ஒரு மாபெரும் யுத்தத்திற்கு அவர்களது யுத்தம் அங்கு ஒரு முன்னோடியாக இருந்தது எனலாம். 

இவ்விருவரில் வெற்றி, தோல்வி யார் பக்கம் என்று தேவர்களாலும் கணித்துச் சொல்ல முடியாத நிலை அப்போது ஏற்பட்டது. இருவரது மார்புகளிலும் அம்புகள் பட்டு இரத்தம் ஆறாக பெருக்கெடுத்தது. அப்போர் காட்சியை தூரத்தில் இருந்து கண்ட அம்பா செய்வதறியாது  திகைத்து நின்றாள்.

இவ்வாறு சாதாரண பாணங்களை முதலில் தொடுத்து ஆரம்பிக்கப்பட்ட பீஷ்ம - பரசுராம யுத்தம், மந்திர பாணங்களை தாண்டி, இப்போது திவ்விய அஸ்த்திரங்களை ஒருவர் மேல், ஒருவர் தொடுத்துக் கொள்ள வகை செய்தது.

அக்கணம் பீஷ்மர், கட்க அஸ்தம் என்னும் பாணத்தை தனது வில்லில் ஆவாகனம் செய்தார். அது கண்ட முனிவர்கள்," இந்த அஸ்திரம் பிரம்மாஸ்த்திரத்தைக் காட்டிலும் சக்தி பெற்ற அஸ்திரம் ஆயிற்றே! என்று அச்சம் கொண்டு இருக்க மறுமுனையில் பரசுராமர் தனது பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தார் இரண்டு திவ்ய அஸ்த்திரங்களும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் சந்தித்து மோதினால் பிரபஞ்சத்தில் பிரளயம் ஏற்படும் என்று தேவர்களும் அஞ்சினர்.

பிரபஞ்சத்தை காக்க சிவன் அவர்கள் இருவர் முன் தோன்றி இரண்டு அஸ்திரத்தை தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டார் இதன் மூலம் இரண்டு அஸ்திரங்களின் மோதிக்கொள்ளும் நிகழ்வு தடுக்கப்பட்டது யுத்தத்தின் முடிவு தெரியாததால் சினம் கொண்ட அம்பை சிவனை வணங்கி முறையிட்டாள்.

ஆகையால் சிவன் அவளுக்கு ஒரு வரம் அருளினார் பீஷ்மனை உன்னால் இப்பிறவியில் அளிக்க இயலாது அடுத்த பிறவியில் உனது எண்ணம்  கட்டாயம் ஈடேறும் என்றார் மேலும் பீஷ்மரும் தனது பங்கிற்கு ஒரு வாக்கினை நல்கினார். 

அவ்வாறு அடுத்த பிறவியில் என்னை கொல்லும் நோக்குடன் நீ என் முன் போர்க்களத்தில் தோன்றும் வேளையில் சிவனின் வாக்கை காப்பாற்றுவதற்காக நான் என்  அஸ்த்திரங்கள் அனைத்தையும் தியாகம் செய்து நிற்பேன் என்றார். மகிழ்ச்சி அடைந்த அம்பா இனி ஒரு கணமும் நான் உயிர் வாழ விரும்பவில்லை உடனே நான் மறுபிறவி எடுப்பேன் உன்னைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறப்பேன் என கூறி தன் உயிர் நீத்தார்

- தொடரும்

No comments:

Post a Comment