Tuesday, December 14, 2021

வாக்குறுதி

 அமெரிக்காவில் கடும் பனி இரவில், தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை அவதானித்தார் ஒரு செல்வந்தர் ..

முதியவருக்கு அருகில் வந்து கேட்டார்

"வெளியே அதிகமாக குளிருகிறதே, உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா?
உங்களுக்கு குளிர் இல்லையா?" என்று

முதியவர் பதிலளித்தார்...

"எனக்கு சூடான உடைகள் இல்லை, ஆனால்.. நான் இப்போது அதற்கு பழக்கப்படுகிறேன்" என்று சொன்னார்

கோடீஸ்வரன் பதிலளிக்கிறார்…

"நான் வரும் மட்டும் காத்திருங்கள்.. நான் உங்களுக்கு ஆடை தருகிறேன்" என்று

அந்த ஏழை மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், அவர் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.. அந்த பணக்கார மனிதன், தன் வேலையால் ஏழை மனிதனை மறந்து விட்டான்...

காலையில் அவர் அந்த ஏழை மனிதனை நினைவு கொண்டார்.
அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்று பார்த்தார்
ஆனால், அந்த முதியவர் குளிரால் இறந்து விட்டார்

அந்த மனிதன் கையில் இப்படி எழுதப்பட்டு இருந்தது…

"எனக்கு சூடான உடைகள் இல்லாத போது,
நான் குளிருடன் போராட முடிந்தது..
ஆனால் ..
நீங்கள் எனக்கு உதவ வாக்குறுதி அளிக்கும் போது, நான் உங்கள் வாக்குறுதிக்கு அடிமையாகி, நான் குளிருக்கு எதிராக போராடும் இருக்கும் திறனை இழந்து விட்டேன்." என்று

எனவே.. வாக்குறுதி அளிக்கும் முன்னும், பொய்யான வாக்குறுதிகளை உருவாக்கும் முன்னும் யோசியுங்கள்…

அது ஒருவரின் மரணத்திற்கு கூட காரணமாக இருக்கலாம்.

No comments:

Post a Comment